சிக்குன்குனியா
From Wikipedia, the free encyclopedia
சிக்குன்குனியா (Chikungunya) என்பது ஒரு தீ நுண்மத்தால் (வைரசால்) பரவும் நோய் ஆகும். இந்த நோய்க்குக் காரணமான தீ நுண்மமானது ஆல்பாத் தீ நுண்மம் வகையைச் சார்ந்தது ஆகும். இந்தத் தீ நுண்மம் ஈடிசு இகிப்தி (Aedes egypti) வகை கொசுக்கள் (இலங்கைத் தமிழ்: நுளம்பு) மூலம் பரவுகின்றன.
சிக்குன்குனியாத் தீ நுண்மம் | |
---|---|
தீநுண்ம வகைப்பாடு | |
குழு: | Group IV ((+)ssRNA) |
குடும்பம்: | Togaviridae |
இனம்: | Alphavirus |
துணையினம்: | சிக்குன்குனியா தீ நுண்மம் |
இது ஒரு உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆனால் 2005-2006 ஆண்டுகளில் ஏறத்தாழ 200 பேர் வரை ரீயூனியன் தீவில் சிக்குன்குனியா தொடர்பான சூழலில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் உள்ளன.[1]
2006ஆம் ஆண்டில் பல இந்திய மாநிலங்களில் இந்நோய் தொற்றியது. செப்டம்பர் 2006 நிலவரப்படி ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபர் 12, 2006 வரை கேரளத்தில் மட்டும் 125 பேர் இந்நோய் தொடர்பாக இறந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இறந்தவர்களில் பெரும்பான்மையோர் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கேரள அரசு இதை தொற்று நோயாகவும் தமிழக அரசு இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாகவும் அறிவித்துள்ளன[2].[broken citation]
2006ஆம் ஆண்டில் இலங்கையில் 100, 000 இற்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர் [3]. இலங்கையின் தமிழர்கள் பெருமளவில் வாழும் வடக்குக் கிழக்கிலேயே இந்நோய்த்தாக்கம் கூடுதலாக அறியப்பட்டது பின்னர் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பயணிகளினால் பரவியது [4] யாழ்ப்பாணத்தில் 20% மானவர்கள் பாதிக்கப்பட்டனர்[5]. [broken citation]
தற்பொழுது இந்த தீ நுண்மம் ஈடிஸ் அல்போபிக்டஸ் (Aedes Albopictus) அல்லது புலிக் கொசு என்ற வகை கொசு மூலமூம் பரவும் என்று பாரிசில் உள்ள பாஸ்டர் கழகத்தில் கண்டறிந்துள்ளார்கள்.