ஆந்திரப் பிரதேசம்
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின்படி நாட்டின் 8-ஆவது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின்படி இது இந்தியாவின் 10-ஆவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.
ஆந்திரப் பிரதேசம் | |
---|---|
பண்: "மா தெலுகு தல்லிகி" | |
இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 14.902800°N 79.090000°E / 14.902800; 79.090000 | |
நாடு | இந்தியா |
மாநில அந்தஸ்து | 1 அக்டோபர் 1953 |
மறுசீரமைப்பு | 1 நவம்பர் 1956 |
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 | 2 சூன் 2014 |
தலைநகரம் | அமராவதி |
பெரிய நகரம் | விசாகப்பட்டினம் |
மாவட்டங்கள் | |
அரசு | |
• நிர்வாகம் | ஆந்திரப் பிரதேச அரசு |
• ஆளுநர் | பிசுவபூசண் அரிச்சந்தன் |
• முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்) |
• சட்டமன்றம் | ஈரவை முறைமை
|
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,62,975 km2 (62,925 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 7-ஆவது |
ஏற்றம் | 390 m (1,280 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 4,93,86,799 |
• தரவரிசை | 10-ஆவது |
• அடர்த்தி | 308/km2 (800/sq mi) |
GDP (2020–21) | |
• மொத்தம் | ₹8.84 டிரில்லியன் (US$110 பில்லியன்) |
• தனிநபர் வருமானம் | ₹1,70,215 (US$2,100) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
UN/LOCODE | IN-AP |
வாகனப் பதிவு | AP |
கல்வியறிவு | 67.41% (2011) |
அலுவல்மொழி | தெலுங்கு |
கடற்கரை நீளம் | 974 கிலோமீட்டர்கள் (605 mi) |
HDI (2017) | 0.649[5] medium · 27வது |
இணையதளம் | www |
^α The Andhra Pradesh Reorganisation Act, 2014 states that Hyderabad is common capital of both Telangana and Andhra Pradesh states for a period of time not exceeding 10 years. | |
சின்னங்கள் | |
சின்னம் | சின்னம் |
அலுவல் மொழி(கள்) | தெலுங்கு |
பாடல் | "மா தெலுகு தல்லிகி"[6] |
நடனம் | குச்சிப்புடி[7] |
விலங்கு | புல்வாய்[7] |
பறவை | பச்சைக்கிளி[7] |
மலர் | மல்லிகை[7] |
மரம் | வேம்பு[7] |
2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த ஐதராபாத் நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-இன்படி ஐதராபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள்வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்டபிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.
குசராத்தை அடுத்து ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் 2-ஆவது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் சத்தீசுகர் மற்றும் ஒடிசா, மேற்கில் கருநாடகா மற்றும் தெற்கில் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. மேலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டமான யானம் என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில் காக்கிநாடா நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
விசயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.