சுரையா
From Wikipedia, the free encyclopedia
சுரையா ஜமால் ஷேக் (Suraiya Jamaal Sheikh) (15 சூன் 1929 - 31 ஜனவரி 2004), புகழ்பெற்ற இந்தி / இந்துசுத்தானி திரைப்பட நடிகை மற்றும் பாலிவுட்டின் பின்னணிப் பாடகர் ஆவார். 1936 முதல் 1963 வரை அவர் நடிப்புத்துறையில் இருந்தார்.[1]
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
சுரையா | |
---|---|
பிறப்பு | சுரையா ஜமால் ஷேக் (1929-06-15)15 சூன் 1929 லாகூர், பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா) (தற்பொழுது [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாப்], பாக்கிஸ்தான்) |
இறப்பு | 31 சனவரி 2004(2004-01-31) (அகவை 74) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பேபி சுரையா (குழந்தை நட்சத்திரமாக) |
குடியுரிமை | இந்தியர் |
பணி | நடிகை மற்றும் தனது படங்களில் பாடிய பிண்ணனிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1936–1963 |
அறியப்படுவது | இந்தி திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் |
சொந்த ஊர் | மும்பை |
கையொப்பம் |
1936 முதல் 1963 வரையிலான திரை வாழ்க்கையில், சூரையா 67 படங்களில் நடித்து 338 பாடல்களைப் பாடியுள்ளார். 1940 கள் மற்றும் 1950 களில் பாலிவுட்டில் முன்னணி பெண்மணி மற்றும் இந்தி சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராகவும் இருந்தார்.[1] பாலிவுட்டில் தனது படங்களுக்குப் பெரும்பாலும் சொந்தமாகத் தானே பாடினார். நய் துனியா (1942) படத்தில் 12 வயதிருக்கும்பொழுது அவர் தனது முதல் திரைப்பாடலைப் பாடினார்.[2]
சூரையா இந்து நடிகரான தேவ் ஆனந்த் உடன் உறவு கொண்டிருந்தார். இவர்களுடனான காதல் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. எனினும், அவரது தாய்வழி பாட்டி அவரை ஒரு இந்துவை திருமணம் செய்ய அனுமதிக்காததால் அவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, சூரையா தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார், 2004 ஜனவரி 31 ஆம் தேதி 74 வயதில் மாரடைப்பு நோயால் இறந்தார்.[3]