பாலிவுட்
இந்தி மொழித் திரைப்படத் துறை / From Wikipedia, the free encyclopedia
இந்தித் திரைப்படத்துறை அல்லது பாலிவுட் என்பது இந்தியாவில் மும்பை மாநகரில் மூலதனமாக கொண்டுள்ள இந்தி மொழியில் தயாரிக்கும் திரைப்படத் தொழிலைக் குறிப்பது ஆகும். இத்துறை இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிப்பு மற்றும் உலக அளவில் மிக அதிகமான அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இதை பாலிவுட் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டும். இந்தப் பெயர் மும்பைக்கு முன்னர் வழங்கப்பட்ட பாம்பே என்ற சொல் மற்றும் 'அமெரிக்க திரைப்படத் துறையை' மையமான ஹாலிவுட் என்ற சொல் ஆகிய இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருளும் கலந்துருவான ஒரு கற்பனைச் சொல் ஆகும்.
இந்தித் திரைப்படத்துறை | |
---|---|
முதன்மை வழங்குநர்கள் | ஏஏ பிலிம்ஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஈரோஸ் இன்டர்நேஷனல் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் யஷ் ராஜ் பிலிம்ஸ் தர்மா புரொடக்சன்ஸ் ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் எக்செல் என்டர்டெயின்மென்ட் ஜீ ஸ்டுடியோஸ்[1][2] |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017) | |
மொத்தம் | 364 |
நிகர நுழைவு வருமானம் (2016)[3] | |
மொத்தம் | ₹15,500 கோடி |
தேசியத் திரைப்படங்கள் | இந்தியா: ₹3,500 கோடி (ஐஅ$565 மில்லியன்) (2014)[4] |
2017 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்படத்துறை 1,986 திரைப்படங்களைத் தயாரித்தது. அதில் 'இந்தி திரைப்படத்துறை' 364 திரைப்படங்களை தயாரித்து மிகப்பெரிய திரைப்படத்துறையாக இந்தியாவில் விளங்குகின்றது. இந்தியத் திரைப்பட வசூல் வருவாயில் 43 சதவீதத்தை இந்தி திரைப்படத்துறை பிடித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படத்துறை 36 சதவீதத்தை பெற்றுள்ளது. 2001 திரைப்படசீட்டு விற்பனையில் இந்திய சினிமா (பாலிவுட் உட்பட) உலகளவில் 3.6 பில்லியன் சீட்டுகளை விற்றதாகக் கூறப்படுகிறது, இது ஹாலிவுட்டின் 2.6 பில்லியன் டிக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.
1970 களில் இருந்து இந்தித் திரைப்படத்துறை காதல், நாடகம், பாட்டு, நடனம், நகைச்சுவை , சண்டைக்காட்சிகள் போன்ற வகைகளை கொண்டு மசாலா திரைப்படங்களை தயாரித்து வருகின்றது. இந்தியில் வெளியான முதல் பேசும் படமான ஆலம் ஆரா என்ற திரைப்படம் 1931 ஆம் ஆண்டு வெளியானது.