தாலமி பேரரசு
From Wikipedia, the free encyclopedia
தாலமைக் பேரரசு (Ptolemaic Kingdom) (/ˌtɒləˈmeɪ.ɪk/; பண்டைக் கிரேக்கம்: Πτολεμαϊκὴ βασιλεία, Ptolemaïkḕ Basileía)[4] (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) அலெக்சாண்டரின் இறப்புக்கு பின்னர், ஹெலனிய காலத்தில் அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் தாலமி சோத்தர் எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். பண்டைய எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் அலெக்சாந்திரியா நகரம் ஆகும். இப்பேரரசின் இறுதி மன்னர் சிசேரியனை கிமு 30-இல் உரோமைப் பேரரசின் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கொன்றதால், எகிப்தில் தாலமிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றது. எகிப்து, உரோமைப் பேரரசின் மாகாணம் ஆனாது.
எகிப்தின் கிரேக்க தாலமி பேரரசு Πτολεμαϊκὴ βασιλεία Ptolemaïkḕ Basileía | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கி மு 305–கி மு 30 | |||||||||||
தலைநகரம் | அலெக்சாந்திரியா | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய கிரேக்க மொழி, எகிப்திய மொழி, பெர்பர் மொழிகள் | ||||||||||
சமயம் | செராபிஸ்[3] | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
பார்வோன் | |||||||||||
• கி மு 305–283 | முதலாம் தாலமி சோத்தர் (first) | ||||||||||
• கி மு 51–30 | ஏழாம் கிளியோபாட்ரா (last) | ||||||||||
வரலாற்று சகாப்தம் | Classical antiquity | ||||||||||
• தொடக்கம் | கி மு 305 | ||||||||||
• முடிவு | கி மு 30 | ||||||||||
நாணயம் | கிரேக்க திராச்மா | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | Cyprus Egypt Libya Turkey Israel Palestine Lebanon Syria Jordan |
இப்பேரரசு ஏழாம் கிளியோபாட்ரா காலத்தில், எகிப்தை ஆண்ட கிளியோபாட்ராவி மகன் சிசேரியன் ஆட்சிக் காலத்தில், உரோமானிய படைத்தலைவர் அகஸ்ட்டஸ் படையெடுப்பால் கி மு 30-இல் முடிவுற்றது. அப்போது எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட ஹெலனிய கால தாலமைக் பேரரசின் காலத்தில் எகிப்து மற்றும் கிரேக்கத்தின் வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[5]