பிந்தைய கால எகிப்திய இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் (Late Period of Egypt), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் உள்ளூர் பார்வோன்கள் கிமு 664 முதல் கிமு 525 வரை ஆண்ட பண்டைய எகிப்தை தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் கிமு 525 முதல் கிமு 332 வரை பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசில் எகிப்து இராச்சியம் ஒரு சிற்றரசாக விளங்கியது.[1]
பிந்தைய கால எகிப்து இராச்சியம் கிமு 664 - கிமு 332 | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
664 கிமு – 332 கிமு | |||||||||||
தலைநகரம் | சாய்ஸ், மெண்டஸ், செபென்னிடோஸ் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய எகிப்திய மொழி | ||||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
பார்வோன் | |||||||||||
வரலாற்று சகாப்தம் | எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலம் | ||||||||||
• தொடக்கம் | 664 கிமு | ||||||||||
• முடிவு | 332 கிமு | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் எகிப்து இராச்சியத்தைப் போரில் வீழ்த்தினார். எகிப்தின் பிந்தைய கால எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்ச பார்வோன்கள் நூபியாவில் தங்கள் எகிப்திய இராச்சியத்தை நிறுவி கிமு 525 முதல் கிமு 332 வரை ஆண்டனர். புது அசிரியப் பேரரசின் கீழ் சில காலம் எகிப்திய இராச்சியம் சிற்றரசாக விளங்கியது. கிமு 329-இல் மாசிடோனியப் பேரரசர் அலெக்சாண்டர் எகிப்திய இராச்சியத்தை கைப்பற்றினார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனியக் காலத்தின் போது அலெக்சாண்டரின் கிரேக்கப் படைத்தலைவர் தாலமி சோத்தர் பண்டைய எகிப்து இராச்சியத்திற்கு பேரரசர் ஆனார்.[2]