நகபானர்
From Wikipedia, the free encyclopedia
நகபானர் (Nahapana) Na-ha-pā-na,[6] மேற்கு இந்தியாவை ஆண்ட இந்தோ சிதிய குல வழித்தோன்றலின் மேற்கு சத்திரபதி வம்ச மன்னர் ஆவார்.[7][8] நகபானர் மேற்கிந்தியாவை கிபி முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் ஆட்சி செய்தார் என்பதை இவர் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் மூலம் அறியப்படுகிறது. இவர் மன்னர் பூமகாவின் மகன் ஆவார். இவர் தற்கால மகாராட்டிரா மாநிலத்தில் பௌத்த துறவிகளுக்காக கர்லா குகைகள், மன்மோடி குகைகள், நாசிக் குகைகள் மற்றும் பாஜா குகைகள் நிறுவினார்.[9]
விரைவான உண்மைகள் நகபானர், ஆட்சி ...
நகபானர் | |
---|---|
மேற்கு சத்திரபதி | |
நகபானாவின் உருவம் பொறித்த வெள்ளி நாணயம்.[1] | |
ஆட்சி | கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றான்டு |
முன்னிருந்தவர் | பூமகா |
மூடு
மேலதிகத் தகவல்கள் நாசிக் குகை எண் 10-இல் நகபானர் நிறுவிய விகாரை ...
நாசிக் குகை எண் 10-இல் நகபானர் நிறுவிய விகாரை |
---|
|
|
மூடு