மன்மோடி குகைகள்
From Wikipedia, the free encyclopedia
மன்மோடி குகைகள் (Manmodi caves) (मानमोडी लेणी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தில், ஜூன்னார் நகரத்தின் தெற்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும்.[1] ஜூன்னார் நகரத்திற்கு அருகில் அமைந்த பிற பௌத்த குகைகள் துளஜா குகைகள், சிவனேரி மற்றும் லெண்யாத்திரி குகைகள் ஆகும்.[1]
மன்மோடி குகைகள், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது.
மன்மோடி குகைகளின் குடைவரைகள் கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கிபி மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நிறுவப்பட்டுள்ளது. [1]
மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்ட மன்மோடி குகைகளை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. இக்குகைகளை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:
- பூதலிங்க குகைத் தொகுதி (भूत लेणी), இதனை யவனர்கள் அளித்த கொடை மூலம் நிறுவப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.
- அம்பா-அம்பிகா குகைத் தொகுதி (अंबा-अंबिका)
- பீமாசங்கர் குகைத்தொகுதி[2]
மன்மோடி மலையின் தென்கிழக்கில் மேற்கு சத்திரபதி மன்னர் நகபானரின் முதலமைச்சர் அய்மாவின் கிபி 124ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[3] அம்பா-அம்பாலிகை குடைவரைகள், நேமிநாதர் உள்ளிட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டது.