நாட்டரசன் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
நாட்டரசன் கோட்டை (ஆங்கிலம்:Nattarasankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கைக்கு கிழக்கே 8 கிமீ தொலைவில், காளையார்கோவிலுக்கு அருகில் உள்ளது.
விரைவான உண்மைகள்
நாட்டரசன் கோட்டை | |
அமைவிடம் | 9°52′N 78°34′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
வட்டம் | காளையார்கோயில் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
5,860 (2011[update]) • 326/km2 (844/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
18 சதுர கிலோமீட்டர்கள் (6.9 sq mi) • 75 மீட்டர்கள் (246 அடி) |
மூடு
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,554 வீடுகளும், 5,860 மக்கள்தொகையும் கொண்டது. [4]
இது 18 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]