நீரில் புளூரைடு கரைப்பு
From Wikipedia, the free encyclopedia
நீரில் புளூரைடு கரைப்பு (Water fluoridation) என்பது பற்சொத்தை விளைவைக் குறைப்பதற்காக பொது நீர் வழங்கும் அமைப்புகளில் கட்டுப்பாடற்ற முறையில் புளூரைடு சேர்க்கும் அல்லது கரைக்கும் செயல்முறை ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவு ஃவுளூரைடு சேர்க்கப்பட்டிருக்கும் நீரானது பற்சொத்தைகளைக் கட்டுப்படுத்தம் திறன் வாய்ந்தது, இது இயற்கையாக அல்லது செயற்கையாக ஃவுளூரைடை சேர்ப்பது/கரைப்பதன் மூலம் நிகழலாம்.[2] இந்த செயல்முறை ஆங்கிலம் பேசும் நாடுகளில் முதன்மையாக நிகழ்த்தப்படுகிறது. ஐரோப்பிய கண்டங்களின் பொது நீர் வழங்கும் முறைகளில் ஃவுளூரைடு சேர்க்கப்படுவதில்லை, இருந்தபோதிலும் சில கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் உப்பில் ஃவுளூரைடு சேர்க்கப்படுகிறது.[3] ஃவுளூரைடு கலந்த நீர் பல் மேற்பூச்சில் செயல்புரிகிறது: வாயில் உள்ள உமிழ்நீருடன் கலந்து குறைந்த அளவிலான ஃவுளூரைடை உருவாக்குகிறது, இது பற்சொத்தையின் ஆரம்ப நிலையில் இருக்கும் போது பல் என்மால் கனிம நீக்கம் விகிதத்தைக் குறைத்து கனிமமாக்கல் விகிதத்தை அதிகரிக்கிறது.[4] குடிநீரில் ஃவுளூரைடு கரைசலை சேர்ப்பது அமெரிக்க ஒன்றியத்தில் ஒரு பொதுவான செயல்முறையாகும்.[2] பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு மேல் ஃவுளூரைடு அளவு இயற்கையாகவே இருக்குமென்றால் ஃவுளூரைடு நீக்கம் தேவைப்படுகிறது.[5] உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு, காலநிலையைப் பொறுத்து ஒரு லிட்டருக்கு 0.5 முதல் 1.0 மி.கி வரையிலான அளவில் ஃவுளூரைடு இருக்கலாம் என்று 1994 ஆம் ஆண்டில் பரிந்துரைத்தது.[6] புட்டியில் அடைக்கப்பட்ட நீரில் எவ்வளவு ஃவுளூரைடு உள்ளது என்பது அறியப்படாததாகும். வீட்டில் பயன்படுத்தப்படும் நீர் வடிகட்டிகள் ஃவுளூரைடை குறைந்த அளவு அல்லது முழுவதுமாக நீக்குகிறது.[7]
பல தொழில்மயமான நாடுகளில் 60-90% வரையிலான பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரும்பாலான வயது வந்தோரிடமும் உள்ள பற்சொத்தை என்பது பொது உடல்நலம் சார்ந்த கவலையாக உள்ளது.[8] நீரில் ஃவுளூரைடு சேர்க்கப்படுவதால் குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கு[9] ஏற்படும் சொத்தைகள் தடுக்கப்படுகிறது. பற்பசை மற்றும் மற்ற வழிகளில் ஃவுளூரைடைப் பயன்படுத்தி வரும் குழந்தைகள் ஃவுளூரைடு சேர்த்த நீரைப் பயன்படுத்திய போது 18-40 % வரை சொத்தை குறைவதாக ஆய்வுகளின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது.[2] நீரில் ஃவுளூரைடு சேர்ப்பதால், வளர்ந்து வரும் பல்லின் தோற்றத்தை மாற்றக்கூடிய பல் ஃபுளூவோரியம் ஏற்படும் எனினும் இவை பெரும்பாலும் மிதமானதாகவே இருக்கும். மேலும் பொது உடல்நலம் அல்லது அழகுணர்ச்சி சார்ந்த பெரிய விஷயமாக இவை கருதப்படுவதில்லை.[10] தீங்கு விளைவிக்கும் மற்ற விளைவுகள் பற்றிய தெளிவான ஆதாரங்கள் ஏதுமில்லை. தரத்தை-நடுநிலையாக்கும் ஆய்வுகள் மூலம் ஃவுளூரைடின் வினைவுறு திறன் பற்றிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது; தீங்கு விளைவிப்பதைக் கண்டறியும் சோதனையின் முடிவுகள் பெரும்பாலும் குறைவான தரத்திலே உள்ளன.[11] அனைத்து வழிகளிலிருந்தும் ஒரு நாளில் எடுத்துக் கொள்ளும் ஃவுளூரைடின் அளவைப் பொறுத்தே அதன் விளைவும் இருக்கும். குடிநீர் பொதுவான மிகப்பெரிய ஆதாரமாகும்;[12] ஃவுளூரைடுள்ள பற்பசை, உப்பு மற்றும் பால் ஆகியவை உள்ளடங்கிய ஃவுளூரைடு சிகிச்சைகள் ஃவுளூரைடின் மற்ற சிகிச்சை முறையாகும்.[13] அதிகமான இடர்களைக் கொண்டுள்ள குழுக்களின் சமூகத்தில் நீர் ஃவுளூரைடு முழுமையாக ஏற்றுக்கொள்ளபட்டு பயன்படுத்தப்பட்டால் கனிசமான நன்மைகள் இருக்கும்.[8] பொதுநலம் சார்ந்த சிறந்த பத்து கண்டுபிடிப்புகள் என்று இருபதாம் நூற்றாண்டில்[14] கண்டுபிடிக்கப்பட்ட சாதனைகளில் நீர் ஃவுளூரைடும் ஒன்று என்று அமெரிக்க ஒன்றியத்தின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. மாறாக, ஐரோப்பிய நாடுகள் பலவ உபயோகப்படுத்தாமலே பற்சொத்தையைக் கண்டனர். இதன் காரணமாக 1970 ஆம் ஆண்டில் ஃவுளூரைடு பற்பசை அறிமுகம் செய்யப்பட்டது.[4] பல்லின் மேற்பரப்பில் ஃவுளூரைடைப் (பற்பசை போன்று) பயன்படுத்தும் தொழிலக மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்கள் ஃவுளூரைடு நீரின் தேவையைப் பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.[4] பல் நலம் மற்றும் பல் பாதுகாப்பு போன்றவற்றில் சமுதாயப் பொருளியல் சார்ந்த சமனிலை இல்லாத காரணத்தினால் ஃவுளூரைடு சேர்ப்பது/கரைப்பது சரியானது என்று அமெரிக்க ஒன்றியத்தில் பலமுறை கூறப்பட்டுள்ளது.[15]
குறிப்பாக குழந்தைகள் மற்றும் ஏழை மக்களிடம் தோன்றும் தீவிரமான நோய்களை கட்டுப்படுத்துவதே நீர் ஃவுளூரைடின் முக்கிய நோக்கமாகும்.[16] பொது நலம் மற்றும் தனிப்பட்ட உரிமைகள் ஆகியவற்றிக்கு இடையே ஒரு முரண்பாட்டை இதன் உபயோகம் தோற்றுவிக்கிறது.[17] நெறிமுறை, சட்டமுறை, பாதுகாப்பு மற்றும் பலன்கள் ஆகியவற்றை சார்ந்து [18] முரண்பாடு[19] மற்றும் எதிர்ப்பு உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள உடல்நலம் மற்றும் பல் நிறுவனங்கள் பல இதன் பாதுகாப்பு மற்றும் வினைவுறு திறன் பற்றி சான்றளித்துள்ளன.[4] இயற்கையாகவே ஃவுளூரைடு அதிகமாக இருக்கும் ஒரு குறிபிட்ட பகுதியைச் சேர்ந்த குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாக 1945 ஆம் ஆண்டு முதல் நீரில் ஃவுளூரைடு பயன்படுத்தப்பட்டது. நடுநிலையில் இருக்கும் ஃவுளூரைடு பல் சிதைவை[20] தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் 2004 ஆம் ஆண்டு ஆய்வின் படி உலகம் முழுவதிலும் 400 மில்லியன் மக்கள் ஃவுளூரைடு நீரைப் பெறுகின்றனர்.[21]