புதுவயல்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் / From Wikipedia, the free encyclopedia
புதுவயல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் காரைக்குடி புறநகர் பகுதிபேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு வருவாய் கிராமங்கள் கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடி நகரிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள்
புதுவயல் | |||||||
அமைவிடம் | 10°06′00″N 78°50′42″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | சிவகங்கை | ||||||
வட்டம் | காரைக்குடி
தலைவர் பதவிப்பெயர தலைவர் பெயர் = sutha | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
11,284 (2011[update]) • 2,257/km2 (5,846/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi) • 12 மீட்டர்கள் (39 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 மக்கள்தொகையும் கொண்டது. [4]