2024 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்கள்
From Wikipedia, the free encyclopedia
13 ஏப்ரல் 2024 அன்று ஈரானிய இராணுவத்தின் ஒரு கிளையான இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு,[3] லெபனான் குழுவான ஹிஸ்புல்லா, யெமன் ஹூத்திகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஆளில்லாத வானூர்திகள், சீர்வேக ஏவுகணைகள், தொலைதூர ஏவுகணைகள் என்பவற்றின் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி தாக்குதல்களை நடத்தினர்.[13] இந்த தாக்குதலுக்கு Operation True Promise என ஈரான் பெயரிட்டது.[14][15] ஏப்ரல் 1 அன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இத்தாக்குதல் அமைந்ததாக ஈரான் கூறியது.[16] அத்தாக்குதலில் இரண்டு ஈரானிய ஜெனரல் தர படையதிகாரிகள் கொல்லப்பட்டனர்.[17] இந்த தாக்குதல் இசுரேல்-ஹமாஸ் போரின் பக்க விளைவாகப் பார்க்கப்பட்டது. மேலும், இஸ்ரேல் மீதான மறைமுக மோதலில் இருந்து ஈரானின் முதல் நேரடி தாக்குதலாக இது அமைந்துள்ளது.[18]
உண்மையான வாக்குறுதி நடவடிக்கை | |
---|---|
2024 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்கள் பகுதி: 2024 ஈரான்-இஸ்ரேல் முரண்பாடு, சிரிய உள்நாட்டுப் போரின் போது ஈரான்-இஸ்ரேல் முரண்பாடு, இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பக்கவிளைவு | |
ஈரானிய ஏவுகணைகள், பாறைக் குவிமாடம், பழைய நகர் (எருசலேம்) | |
வகை | ஏவுகணை, ஆளில்லா வானூர்திப்போர் |
இடம்/கள் | |
கட்டளையிட்டார் |
|
தேதி | 13–14 April 2024[2] |
செய்து முடித்தவர் | |
விளைவு | இஸ்ரேல் அறிக்கை:
ஈரான் அறிக்கை:
அமெரிக்க அறிக்கை
|
இழப்பு | 1 இஸ்ரேலிய குடிமகன் பலத்த காயம்.[7] 31 பேர் சிறு காயங்கள் அல்லது பதட்டத்திற்காக சிகிச்சை பெற்றனர்.[8][9][10] |
இரும்புக் கவசம் | |
---|---|
இஸ்ரேல் மீதான 2024 ஈரானிய தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு | |
வகை | வான் பாதுகாப்பு நடவடிக்கை, ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கை |
இடம்/கள் | |
கட்டளையிட்டார் |
|
நோக்கம் | உள்வரும் ஈரானிய ஏவுகணைகள், தற்கொலை ஆளில்லா வானூர்திகள் |
செய்து முடித்தவர் |
|
விளைவு | தடுத்து நிறுத்தப்பட்ட ஆயுதங்கள்:
|