இப்னு கல்தூன்
From Wikipedia, the free encyclopedia
இப்னு கல்தூன் என அழைக்கப்பட்ட அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ (அரபு மொழி: أبو زيد عبد الرحمن بن محمد بن خلدون الحضرمي, , (மே 27, கிபி 1332 /732 AH – மார்ச் 19, கிபி 1406 /808 AH)), ஒரு வட ஆப்பிரிக்கப் பல்துறையாளர் ஆவார். வட ஆப்பிரிக்காவிலுள்ள இன்றைய தூனிசியப் பகுதியில் பிறந்த இவர் வானியல், பொருளியல், வரலாறு, இசுலாம், இசுலாமிய இறையியல், நீதித்துறை, சட்டம், கணிதம், படைத்துறை உத்திகள், மெய்யியல், சமூக அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். இவர் ஒரு அராபிய அல்லது பர்பர் இனத்தைச் சேர்ந்தவர். இவர், மக்கட் பரம்பலியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்றுவரைவியல், வரலாற்று மெய்யியல், சமூகவியல் போன்ற பல சமூக அறிவியல் துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அறிஞரும், மெய்யியலாளருமான சாணக்கியருடன் இவரும் தற்காலப் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகின்றனர்.
இப்னு கல்தூன் | |
---|---|
பிறப்பு | 27 மே, கிபி1332 / 732 AH |
இறப்பு | 19 மார்ச் கிபி 1406 / 808 AH |
காலம் | மத்திய காலம் |
பகுதி | முசுலிம் அறிஞர் |
பள்ளி | மாலிக்கி மத்ஹப், இசுலாமியப் பொருளாதாரச் சட்டவியல் |
முக்கிய ஆர்வங்கள் | சமூக அறிவியல்கள், சமூகவியல், வரலாறு, வரலாற்றுவரைவியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்று மெய்யியல், மக்கட் பரம்பலியல், இராசதந்திரம், பொருளியல், இசுலாம், படைத்துறைக் கோட்பாடு, மெய்யியல், அரசியல், இறையியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | மக்கட் பரம்பலியல், வரலாற்று வரைவியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்று மெய்யியல், சமூகவியல், சமூக அறிவியல், தற்காலப் பொருளியல் போன்ற துறைகளின் முன்னோடி. |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
பலர் இவரை இத்தகைய பல சமூக அறிவியல் துறைகளினதும், பொதுவாகச் சமூக அறிவியலினது தந்தையாகவும், மனித வரலாற்றை அறிவியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்த வரலாற்று மேதையாகவும், வரலாற்றுத் தத்துவத்தை தோற்றுவித்த மாபெரும் அறிஞராகவும் கருதுகிறார்கள். Russeo, Locke, Hobbes போன்ற மேற்கத்தேய சிந்தனையாளர்கள் கல்தூணுக்கு இணையானவர்கள் அல்ல என்பது ஒரு புறமிருக்க, அவரோடு இணைத்துப் பேசுவதற்குக்கூட தகுதியற்றவர்கள் என்று ரொபட்(Robert) என்ற அறிஞர் தனது ' வரலாற்றுத் தத்துவங்கள் ' நூலில் குறிப்பிடுகின்றார். இப்னு கல்தூண் உருவாக்கிய வரலாற்றுத் தத்துவம் "முதத்திமா" என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. முதத்திமா என்பது அவரது பெரும் நூலான நான்கு பாகங்களைக்கொண்ட "கிதாபுல் இபர்" என்ற நூலின் நீண்ட முகவுரையாகும்.
இந்த முகவுரையில் சமூகவியல், வரலாற்றுத் தத்துவங்களை எடுத்துக் கூறும் இவர், அதன் அடுத்த பகுதியில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் வாழ்ந்த மனித இனங்களின் வரலாறுகளை ஆய்வு செய்துள்ளார்.
இவர் சமூகங்கள், நாகரீகங்களின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அவைகளின் வீழ்ச்சி போன்றவற்றின் பின்னாலுள்ள வரலாற்று விதிகளை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். அது மட்டுமன்றி பூமியின் சுவாத்திய நிலைமைகள், புவியியல் அம்சங்கள், தார்மீக, ஆத்மீக சக்திகள் என்பன மனித வரலாற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்ந்து எழுதினார். இவ்வாறு புராணங்களாகவும், கர்ண பரம்பரைக்கதைகளாகவும் இருந்த வரலாற்றுத் துறையை ஆதாரபூர்வமான ஒரு அறிவியல் துறையாக மாற்றியமைத்தார்.19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிஞர்கள் இப்னு கல்தூனையும்,அவரது முக்கியமான புத்தகத்தையும் கருத்தில் கொண்டு இப்னு கல்தூன், முஸ்லிம் உலகிலிருந்து வந்த மிகச்சிறந்த மெய்யியலாளர் என ஒப்புக்கொள்கின்றனர்.[1][2]