இராட்டிரகூடர்
இந்திய அரச மரபு (6 முதல் 10ஆம் நூற்றாண்டுவரை) / From Wikipedia, the free encyclopedia
இராட்டிரகூடர் (கன்னடம்: ರಾಷ್ಟ್ರಕೂಟ) பொ.ஊ. 6 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர். 7ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செப்பேடுதான் அவர்களின் ஆட்சியில் நமக்கு கிடைத்த முதல் ஆவணமாகும். இது மத்தியப்பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள மான்பூர் என்னும் இடத்தில் கிடைத்தது. அச்சல்பூர் (தற்கால மராட்டியத்தின் எலிச்சப்பூர்) கனோஞ் அரசர் பற்றியும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இராஷ்டிரகூடர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் மொழி என்ன என்று பல சர்ச்சைகள் உள்ளது.
இராட்டிரகூடர் ರಾಷ್ಟ್ರಕೂಟ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ. 753–பொ.ஊ. 982 | |||||||||
நிலை | பேரரசு | ||||||||
தலைநகரம் | மன்யக்கேடா | ||||||||
பேசப்படும் மொழிகள் | கன்னடம் சமசுகிருதம் | ||||||||
சமயம் | இந்து ஜைனம் பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மகாராசா | |||||||||
• பொ.ஊ. 735–756 | தந்திதுர்கா | ||||||||
• பொ.ஊ. 973–982 | நான்காம் இந்திரன் | ||||||||
வரலாறு | |||||||||
• இராஷ்டிரகூடர்களின் முதல் ஆவணம் கிடைத்தது | பொ.ஊ. 753 | ||||||||
• தொடக்கம் | பொ.ஊ. 753 | ||||||||
• முடிவு | பொ.ஊ. 982 | ||||||||
|
எலிச்சப்பூர் அரசு பாதமியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் பாதுகாப்பில் இருந்த ஒன்றாகும். அப்போது எலிச்சிப்பூரை ஆண்டது தந்திதுர்கா ஆவார். அவர் சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை முறியடித்து தற்கால கர்நாடகவிலுள்ள குல்பர்கா பகுதியில் பேரரசை நிறுவினார். அவரின் மரபில் வந்தவர்கள் மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் எனப்பட்டனர். தென் இந்தியாவில் சக்திமிக்க அரசாக பொ.ஊ. 753இல் உருவாகினர். அதே சமயத்தில் வங்காளத்தின் பாலப் பேரரசும் மால்வாவின் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசும் கிழக்கு வடமேற்கில் பெரும் சக்தி படைத்தவர்களாக உருவாயினர். அரேபியர்கள் 851 காலத்தில் இராஷ்டிரகூடர்கள் உலகின் நான்கு முதன்மையான பேரரசுகளில ஒன்று என்று சில்சிலாடுட்டவரிக் (Silsilatuttavarikh) என்ற நூலில் குறித்துள்ளனர்.[1]
பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை கங்கை சமவெளியை கைப்பற்ற இராஷ்டிரகூடர்கள், வங்காளத்தின் பாலர்கள், பிரதிதாரரர்கள் இடையே போர் நடைபெற்றது. ஒவ்வொரு பேரரசும் கங்கை சமவெளியிலுள்ள கனோஞ்ஞை சில காலம் ஆண்டார்கள். இராஷ்டிரகூடர்கள் பெரும் ஆற்றலுடன் விளங்கிய காலத்தில் வடக்கில் யமுனை ஆற்றுக்கும் கங்கை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியும் தெற்கில் கன்னியாகுமரியும் அவர்கள் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. அக்காலப்பகுதியில் கட்டகலை சிறப்பான இடத்தை பிடித்ததுடன் சிறந்த இலக்கியங்களும் படைக்கப்பட்டன. இம்மரபு அரசர்கள் தொடக்கத்தில் இந்து சமயத்தை பின்பற்றினார்கள். பின்னால் வந்த அரசர்கள் ஜைன மதத்தின் மீது பற்றுகொண்டிருந்தார்கள்.
இவர்களின் ஆட்சியில் ஜைன மத கணித நிபுணர்களும் வல்லுனர்களும் கன்னட மொழிக்கும் சமசுகிருத மொழிக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள். இப்பேரரசின் புகழ்பெற்ற மன்னன் முதலாம் அமோகவர்சா இயற்றிய கவிராஜமார்கம் கன்னட இலக்கியத்தின் சிறப்பான படைப்பாகும். இவர்கள் ஆட்சியில் திராவிட கட்டகலை பாணியில் சிறந்த கட்டடங்கள் கட்டப்பட்டன. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில், மகாராட்டிரத்திலுள்ள எலிபண்டா குகைகள், கருநாடகத்தின் பட்டடக்கலில் உள்ள காசிவிசுவநாதன் கோவில், ஜைன நாராயணன் கோவில் ஆகியவை இவர்களின் கட்டகலைக்கு காட்டாக உள்ளன. இவை அனைத்தும் உலகப் பாரம்பரியக் களத்தின் பாதுகாப்பில் உள்ள இடங்களாகும்.