இறைமை
From Wikipedia, the free encyclopedia
இறையாண்மை (Sovereignty) என்பது ஓர் அரசின் அல்லது ஒரு நாட்டின் முக்கிய கூறாக அமைவது. இது அரசின் முழுமையான அதிகாரம் ஆகும். இறைமை என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் ஜுன் போடின் ஆவார். எவராலும் எதிர்க்கப்பட முடியாத முறியடிக்கப்பட முடியாத அரசியல் அதிகாரம் 'இறையாண்மை' என அழைக்கப்படுகிறது.[1] சட்ட வரையறைகளையும் ஆட்சியதிகாரங்களையும் உருவாக்குவதற்கும், வேண்டியபோது நீக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் உள்ள தத்துவம் இறையாண்மை எனப்படும். அரசினை உருவாக்குகின்ற நான்கு அடிப்படைக் கூறுகளுள் இன்றியமையாத ஒரு கூறு இறைமை ஆகும். மற்றவை மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம் ஆகிய மூன்றாகும்.[2] இறைமை மக்களுக்குரியதாக இருப்பது சனநாயகத்தின் அடிப்படைப் பண்பாக கொள்ளப்படுகிறது.[3]