காடைக்கண்ணி
From Wikipedia, the free encyclopedia
காடைக்கண்ணி (oat) (அவினா சட்டைவா-Avena sativa) என்பது கூலப் பயிராகும். இது மாந்தருக்குக் கூழாகவோ கஞ்சியாகவோ பயன்பட்டாலும் இதன் முதன்மையான பயன் கால்நடைகளுக்கான தீனியாகவே அமைகிறது. இது ஊட்டச் சத்து மிக்க குருதிக்கொழுப்பு குறைவான தொடர்ந்து உண்னத்தக்க உணவாகும்.[1]
விரைவான உண்மைகள் காடைக்கண்ணி, உயிரியல் வகைப்பாடு ...
காடைக்கண்ணி | |
---|---|
பூந்துணர் அமைந்த காடைக்கண்ணிப் பயிர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | பூப்பன |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | கம்மெலினிடுசு (Commelinids) |
வரிசை: | பொயேலெசு (Poales) |
குடும்பம்: | பொயேசியே (Poaceae) |
பேரினம்: | அவினா |
இனம்: | அ. சட்டைவா |
இருசொற் பெயரீடு | |
அவினா சட்டைவா கரோலசு இலின்னேயசு (1753) | |
மூடு
கோதுமையில் உள்ள கிளியாடினை ஒத்த காடைக்கண்ணியின் உட்கூறான அவெனின் குறிப்பிட்ட சிலருக்கு உடற்குழிநோயை உருவாக்க வல்லதாகும்.[2][3] மேலும் ,இதில் மாப்பிசின் உள்ள மற்ற கூலங்கள் விரவியே கிடைக்கிறது; குறிப்பாக கோதுமையும் பார்லியும் கலந்தே கிடைக்கிறது.[3][4][5]