சரணடைதல் (படைத்துறை)
From Wikipedia, the free encyclopedia
படைத்துறைச் சொற் பயன்பாட்டில் சரணடைதல் என்பது, பிரதேசத்தின் மீதான கட்டுப்பாடு, போர்வீரர், அரண்கள், கப்பல்கள், ஆயுதங்கள் என்பவற்றை இன்னொரு படையினரிடம் துறந்து விடுவதைக் குறிக்கும். சரணடைதல் போர் எதுவும் இடம்பெறாமலேயே அமைதியாக நடைபெறலாம். அல்லது, போரில் ஒரு பகுதி தோல்வி அடைவதன் மூலம் ஏற்படலாம். இறைமை உள்ள நாடு ஒன்று போர் ஒன்றில் தோல்வியுற்ற பின்னர் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் அல்லது சரணடைதல் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இடுவதன் மூலம் சரணடைவது வழக்கம். போர்க்களத்தில் தனிப்பட்ட வீரர்கள் அல்லது படைத் தலைமையின் கட்டளைப்படி மொத்தமாகச் சரணடையும் போது அவர்கள் போர்க் கைதிகள் ஆகிறார்கள்.