சாக்கியர்கள்
From Wikipedia, the free encyclopedia
சாக்கியர் (Shakya) என்பவர்கள் இந்தியாவின் இரும்பு யுகத்தில் (கி.மு. 1 ஆம் நூற்றாண்டு) ஒரு குலமாக இருந்தனர். இவர்கள் மகத நாடு, இன்றைய நேபாளம், வட இந்தியாவில் இமயமலைக்கு அருகில் பரவியிருந்தனர். இவர்கள் ஒரு சுயாதீன தன்னலக்குழு குடியரசு அரசை உருவாக்கினர். தங்கள் குடியரசை "சாக்கிய ஞானராச்சியம்" என்று அழைத்தனர் . [1] அதன் தலைநகரமாக கபிலவஸ்து இருந்தது. இது இன்றைய திலௌராகோட், நேபாளம் அல்லது இந்தியாவின் இன்றைய பிப்ரவாவில்அமைந்திருக்கலாம் . [2] [3] [4]
சாக்கியர் | |
---|---|
கௌதம புத்தர், சாக்கிய முனி என்று மிகவும் பிரபலமான அழைக்கப்படுகிறார். திபெத், 11 ஆம் நூற்றாண்டின் அமர்ந்த நிலையில் உள்ள வெண்கலச் சிலை. |
கௌதம புத்தர் (கி.மு. 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை), தனது போதனைகளை பௌத்த மதத்தின் அஸ்திவாரமாக மாற்றினார். [குறிப்பு 2] இவர் நன்கு அறியப்பட்ட சாக்கியர் ஆவார். இவர் தனது வாழ்நாளில் "சித்தார்த்த கௌதமர்" என்றும், "சாக்கியமுனி" என்று அறியப்பட்டார். இவர் ஞானராச்சியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான சுத்தோதனரின் மகனாவார்.