சிவன்
தமிழ்கடவுள் / From Wikipedia, the free encyclopedia
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விட்டுணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விட்டுணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார்.[1][2] பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.[3]
சிவன் | |
---|---|
யோகநிலையில் சிவன் | |
அதிபதி | யாவற்றுக்கும், சைவ, அழித்தல் முழுமுதல் |
வேறு பெயர்கள் | ஈசன், ஐ, அம்மையப்பன், மகாதேவன், முக்கட்செல்வன், இன்னும் பல |
தேவநாகரி | शिव |
சமசுகிருதம் | சிவ |
தமிழ் எழுத்து முறை | சிவன் |
வகை | மும்மூர்த்திகள் |
இடம் | கயிலை மலை |
மந்திரம் | ஓம் நமசிவாய |
ஆயுதம் | திரிசூலம், மான் - மழு |
துணை | பார்வதி (சக்தி/காளி/துர்க்கை) |
குழந்தைகள் | விநாயகர், முருகர், அசோக சுந்தரி |
வாகனம் | நந்தி |
நூல்கள் | சைவநூல்கள் |
சமயம் | சைவம் |
விழாக்கள் | சிவராத்திரி பிரதோசம் |