தோமோயுகி யமாசிதா
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய இராணுவத்தில் தளபதியாக இருந்தவர் / From Wikipedia, the free encyclopedia
தோமோயுகி யமாசிதா (ஆங்கிலம்: Tomoyuki Yamashita அல்லது Tomobumi Yamashita; சப்பானியம்: 山下 奉文); என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய இராணுவத்தில் (Imperial Japanese Army) தளபதியாக (General) பதவி வகித்தவர்.[2]
விரைவான உண்மைகள் தோமோயுகி யமாசிதாTomoyuki Yamashita山下 奉文, சப்பானிய இராணுவ ஆளுநர் (பிலிப்பைன்சு 1942 - 1945) ...
தோமோயுகி யமாசிதா Tomoyuki Yamashita 山下 奉文 | |
---|---|
சப்பானிய இராணுவ ஆளுநர் (பிலிப்பைன்சு 1942 - 1945) | |
பதவியில் 26 செப்டம்பர் 1944 – 2 செப்டம்பர் 1945 | |
ஆட்சியாளர் | இறோகித்தோ |
முன்னையவர் | சிகநோரி குரோடா |
பின்னவர் | பதவி இல்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1885-11-08)8 நவம்பர் 1885 ஒத்தோயோ கொச்சி, சப்பானியப் பேரரசு |
இறப்பு | 23 பெப்ரவரி 1946(1946-02-23) (அகவை 60) லாகுனா, பிலிப்பைன்சு |
காரணம் of death | தூக்கிலிடப்பட்ட மரணதண்டனை |
இளைப்பாறுமிடம் | தாமா ரெயின் கல்லறை, தோக்கியோ, சப்பான் |
முன்னாள் கல்லூரி | சப்பானிய இராணுவக் கல்லூரி |
விருதுகள் | கோல்டன் கைட் விருது உதய சூரியன் விருது புனித பொக்கிச விருது ஜெர்மன் கழுகு விருது |
புனைப்பெயர்(s) | மலாயா புலி பாத்தான் மிருகம்[1] |
Military service | |
பற்றிணைப்பு | சப்பான் |
கிளை/சேவை | சப்பானிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1905–1945 |
தரம் | தளபதி |
கட்டளை | சப்பானிய 25-ஆவது இராணுவம் சப்பானிய தரைப்படை 1-ஆவது இராணுவம் சப்பானிய தரைப்படை 14-ஆவது இராணுவம் |
போர்கள்/யுத்தங்கள் | முதலாம் உலகப் போர் இரண்டாம் சீன-சப்பானியப் போர் பசிபிக் போர் |
மூடு
மலாயா படையெடுப்பு மற்றும் சிங்கப்பூர் போரின் போது சப்பானியப் படைகளை யமாசிதா வழிநடத்தினார். தீபகற்ப மலேசியா மற்றும் சிங்கப்பூரை 70 நாட்களில் கைப்பற்றினார். அதனால் தோமோயுகி யமாசிதாவுக்கு "மலாயாவின் புலி" (The Tiger of Malaya) எனும் அடைமொழிப் பெயர் பெயரிடப்பட்டது.[3]