நந்தகோபன் (தொன்மவியல்)
From Wikipedia, the free encyclopedia
நந்த கோபன் அல்லது நந்தகோபர் நந்தசேன மகாராஜா என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு யாதவர் குல (இடையர்) இனத்தை சேர்ந்த அரசர் ஆவார். வசுதேவரின் நண்பரான நந்தகோபன். வசுதேவருடைய மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் வசுதேவர், கிருஷ்ணர் பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த இடையர்களின் தலைவராகிய நந்தசேனரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தசேனரே கிருட்டிணனையும் பலராமனையும் வளர்த்தார். யசோதை இவரது மனைவி.[1]
விரைவான உண்மைகள் நந்தகோபன் (தொன்மவியல்), தேவநாகரி ...
நந்தகோபன் (தொன்மவியல்) | |
---|---|
தேவநாகரி | नंद |
குழந்தைகள் | கிருட்டிணன், பலராமன் யோகமாயா |
நூல்கள் | பாகவதம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மகாபாரதம் |
அரசமரபு | யது குலம் |
மூடு