பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி
From Wikipedia, the free encyclopedia
பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் அல்லது பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (French East India Company, பிரெஞ்சு மொழி: La Compagnie française des Indes orientales அல்லது Compagnie française pour le commerce des Indes orientales) 1664ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் வணிக நிறுவனமாகும். இது குடியேற்றவாத இந்தியாவில் பிரித்தானிய, டச்சு கிழக்கிந்திய நிறுவனங்களுடன் போட்டியிட உருவாக்கப்பட்டதாகும்.
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1664 |
தலைமையகம் | பாரிசு |
தொழில்துறை | வணிகம் |
கிழக்கு உலகில் வணிக முயற்சிகளை மேற்கொள்ள ஜீன்-பாப்டிஸ்ட் கோல்பெர்ட்டால் திட்டமிடப்பட்டு பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரால் தனியுரிமை வழங்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் இயங்கிய மூன்று நிறுவனங்கள் - சீன நிறுவனம், கிழக்கு நிறுவனம், மடகாசுகர் நிறுவனம் இணைக்கப்பட்டு புதிய நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குனராக தெ பாயே இருந்தார். இவருக்குத் துணையாக சப்பானில் இருபதாண்டுகள் உட்பட, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் முப்பதாண்டுகள் பட்டறிவு கொண்ட பிரான்சுவா கரோன்[1] மற்றும் இசஃபகான், பெர்சியாவில் வணிகராக இருந்த மர்காரா அவான்சின்ட்சு [2] இயக்குனர்களாக இருந்தனர்.