மலாயா
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் / From Wikipedia, the free encyclopedia
1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப்பட்டது.
Malaya | |||||||
---|---|---|---|---|---|---|---|
கி.மு.2000 தொடங்கி 1963 வரை–1963 | |||||||
தலைநகரம் | கோலாலம்பூர் | ||||||
பேசப்படும் மொழிகள் | மலாய் ஆங்கிலம் தமிழ் சீனம் | ||||||
அரசாங்கம் | அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு | ||||||
மாட்சிமை தங்கிய பேரரசர் | |||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | கி.மு.2000 தொடங்கி 1963 வரை | ||||||
• சுதந்திரம் | 31 ஆகஸ்டு 1957[1] | ||||||
• உருவாக்கம் மலேசியா | 16 செப்டம்பர் 1963 1963 | ||||||
பரப்பு | |||||||
1963 | 132,364 km2 (51,106 sq mi) | ||||||
நாணயம் | மலாயா ரிங்கிட்; பிரித்தானிய போர்னியோ டாலர்]] | ||||||
|
ஏற்கனவே இருந்த மலாயாவுடன் சிங்கப்பூர், சரவாக், சபா மாநிலங்கள் இணைந்து மலேசியா எனும் ஓர் அமைப்பை உருவாக்கின. அந்த மலேசிய அமைப்பில் இருந்து 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் விலகிக் கொண்டது. மலாயா என்பது வேறு. மலாயா கூட்டமைப்பு என்பது வேறு.
1948-ஆம் ஆண்டில் இருந்து 1963-ஆம் ஆண்டு வரை மலாயாவை, மலாயா கூட்டமைப்பு (Federated Malays States) என்று அழைத்தனர். அந்தக் கால கட்டத்திற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப்பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேசுவரா காலத்தில், தீபகற்ப மலாயாவை மலாயா என்றே அழைத்தார்கள். இராசேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது மலைநாடு மலாயா என்றே அழைக்கப்பட்டது. கம்போடியப் பேரரசை உருவாக்கிய ஜெயவர்மன் II; ஜெயவர்மன் V - சூரியவர்மன் II காலத்திலும் மலாயாத் தீபகற்பம்; மலாயா என்றுதான் அழைக்கப்பட்டு உள்ளது.