மாயா நாகரிகம்
From Wikipedia, the free encyclopedia
மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால இடைஅமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஒண்டூராசு போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது[1]. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது[2]. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது. அப்பகுதியில் இலட்சகணக்கான மக்கள் இன்று மாயன் மொழிகளில் பேசுகின்றனர்.2005 ஆம் ஆண்டு ராபினல் அச்சி என்ற அச்சி மொழி நாடகம் யுனெஸ்கோ மூலம் பாரம்பரிய வாய்வழி காவியமாக அங்கீகரிக்கப்பட்டது.
மாயா நாகரிகம் |
மொழிகள் | மக்கள்
|
மாயா வரலாறு |
மாயாவின் வீழ்ச்சி |