முகலாய-மராத்தியப் போர்கள்
From Wikipedia, the free encyclopedia
முகலாய-மராத்தியப் போர்கள் அல்லது தக்காணப் போர்கள் (Mughal–Maratha Wars or Deccan War or The Maratha War of Independence), முகலாயப் பேரரசுக்கும், மராத்தியப் பேரரசுக்கும் இடையே 1680-ஆம் ஆண்டு முதல் 1707-ஆம் ஆண்டு முடிய 27 ஆண்டுகள் நடைபெற்ற போர்களைக் குறிக்கும். இப்போர்கள் பெரும்பாலும் தக்காணப் பீடபூமியில் நடைபெற்றதால் தக்காணப் போர்கள் என்றும் மற்றும் தக்காணத்தில் மராத்தியர்கள் தன்னாட்சி நாட்டை அமைப்பதற்கான போர்கள் என்றும் அழைப்பர்.
முகலாய-மராத்தியப் போர்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
மராத்தியப் பேரரசு | முகலாயப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சம்பாஜி † சத்திரபதி இராஜாராம் மகாராணி தாராபாய் ஹம்பிராவ் மோஹிதே † இராமசந்திர பந்த் அமத்யா சந்தாஜி கோர்படே தானாஜி ஜாதவ் | அவுரங்கசீப் முதலாம் ஜெய் சிங் முகமது ஆசம் ஷா முதலாம் பகதூர் சா ஜுல்பிகர் கான் உசைன் அலி கான் |
||||||
பலம் | |||||||
150,000[4] | 500,000[4] | ||||||
இழப்புகள் | |||||||
அறியப்படவில்லை | 2.7 - 3 மில்லியன் [5][6] | ||||||
2 மில்லியன் பொதுமக்கள் போரின் காரணமாக ஏற்பட்ட வறட்சி மற்றும் பஞ்சத்தாலும், பிளேக் நோயாலும் இறந்தனர். |
மராத்வாடா பிரதேசத்தின் பிஜப்பூர் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த பேரரசர் சிவாஜியை வெல்வதற்கு, 1680-ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் பிஜப்பூர் மீது போர் தொடுத்தார். [7]1707-இல் அவுரங்கசீப்பின் இறப்பிற்குப் பின்னர், 1737-ஆம் ஆண்டுளில் நடைபெற்ற தில்லிப் போர், போபால் போர் மற்றும் 1758-ஆம் ஆண்டில் நடைபெற்ற பெசாவர் போர்களில் மராத்தியப் படைகள், முகலாயப் படைகளை வென்றது.[8]