கிருஷ்ண பலராமர் கோயில்
உத்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில் / From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ண பலராமர் கோயில் (Sri Krishna Balaram Mandir, also called ISKCON Vrindavan), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் அமைந்த மூன்று கோயில்களின் தொகுதி ஆகும்.[1] இக்கோயில் வளாகத்தை இஸ்கான் பக்தி இயக்கத்தினர் 1977-ஆம் ஆண்டில் நிறுவினர். இக்கோயில் வளாகத்தில் ராதை-கிருஷ்ணருக்கு இராதா சியாம்சுந்தர் எனும் பெயரில் ஒரு கோயிலும், கிருஷ்ணர்-பலராமர் பெயரில் ஒரு கோயிலும் மற்றும் சைதன்யர்-நித்தியானந்தர் கோயிலும் உள்ளது.
கிருஷ்ண பலராம் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | மதுரா |
அமைவு: | பிருந்தாவனம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோயில் கட்டிடக்கலை |
இணையதளம்: | www.iskconvrindavan.com |
இக்கோயில் நடுவில் கிருஷ்ணர் மற்றும் பலராமன் மூலவர்களாக உள்ளனர். வலப்புறத்தில் இராதா கிருஷ்ணன் இராதா சியாம்சுந்தர் எனும் பெயரில் கோபியர்களுடன் ஒரு தனிக்கோயில் உள்ளது. இடது புறத்தில் சைதன்யர், நித்தியானந்தர் மற்றும் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஆகியோர்களுக்கு கோயில் உள்ளது.[2]இக்கோயிலின் நுழைவாயில் அருகேசைதன்யர் மற்றும் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஆகியோர்களின் சமாதி மண்டபம் உள்ளது.