கௌடிய வைணவம்
From Wikipedia, the free encyclopedia
கௌடிய வைணவம் (Gaudiya Vaishnavism), சைதன்ய வைணவம்,[1] ஹரே கிருஷ்ணா என்ற பெயர்களில் அழைக்கப்படும் வைணவப் பிரிவை கிழக்கிந்தியாவின், வங்காளம் மற்றும் ஒடிசாவில் நிறுவியர் சைதன்ய மகாபிரபு (பொ.ஊ. 1486–1534) ஆவார். வைஷ்ணவம் என்பற்கு விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வழிபடுபவர்கள் என்று பொருள். கௌடிய வைஷ்ணவத்தின் தத்துவங்கள் பகவத் கீதை மற்றும் பாகவத புராணத்தை அடிப்படையாகக் கொண்டது.
முழு முதற் கடவுளான கிருஷ்ணர் மீது பக்தி செலுத்துவதே, பிறவிச்சுழற்சியிலிருந்து விடுபடுதற்கான ஒரே வழி என கௌடிய வைணவத்தின் நம்பிக்கை ஆகும்.[2]