சுவாமிநாராயண் சம்பிரதாயம்
From Wikipedia, the free encyclopedia
சுவாமி நாராயண் சம்பிரதாயம் (Swaminarayan Sampradaya) மேலும் சுவாமிநாராயணன் இயக்கம் என்பது இராமானுசரின் விசிட்டாத்துவைதத்தில் வேரூன்றிய ஒரு இந்து வைணவ சம்பிரதாயம் ஆகும்.[1][2] கிருட்டிணனின் அவதாரமாக[3][4][5][6] அல்லது உயர்ந்த கடவுளான புருசோத்தமரின் [4][5][7][8][9] மிக உயர்ந்த வெளிப்பாடாக சுவாமி நாராயண் என்று அழைக்கப்படும் அதன் கவர்ந்திழுக்கும் நிறுவனர் சகசானந்த சுவாமியின் வழிபாட்டால் வகைப்படுத்தப்படுகிறது.
நிறுவனர் | |
---|---|
சுவாமி நாராயண் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
புனித நூல்கள் | |
| |
மொழிகள் | |
பாரம்பரியத்தின் படி, மதக் குழுவும், சகசானந்த சுவாமியும் சுவாமி- நாராயணன் (கடவுள் விஷ்ணு)[web 1][web 2]) என்ற இரண்டு சமசுகிருத வார்த்தைகளின் கலவையான சுவாமி நாராயணன் என்று அறியப்பட்டனர்.[10]
சுவாமி நாராயணனின் தத்துவத்தில் வாழ்க்கையின் இறுதி இலக்கு என்பது பிரம்மரூபமாக மாறுவதும், அக்சரபிரம்மனின் வடிவத்தை (ரூபம்) அடைவதுவுமாகும். இதில் கடவுள் மீதான தொடர்ச்சியான மற்றும் தூய்மையான பக்தியினால் ஜீவனானது மாயை அல்லது சம்சாரத்திலிருந்து (பிறவிச்சுழற்சி) வவிடுவிக்கப்பட்டு நித்திய பேரின்பத்தை அனுபவிக்கிறது. சத்ய பக்தியை வழங்குகிறது.[11][12]