ராசலீலை
From Wikipedia, the free encyclopedia
ராச லீலை (Rasa lila) (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி rāsa-līlā) (இந்தி: रास लीला) என்பது ஸ்ரீகிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்த போது கோபியர் மற்றும் ராதையுடன் ஆடிய ஆட்டங்களே ராச லீலை என்பர். இது குறித்து பாகவத புராணம், கீத கோவிந்தம் போன்ற சமசுகிருத மொழி இலக்கியங்களில் விரிவாக கூறுகிறது. கதக் மற்றும் மணிப்புரி நடனங்கள் ராச லீலை அடிப்படையில் வளர்ந்தது.[1]
ராச லீலை என்பதற்கு அழகுணர்ச்சியுடன் ஆடுவது என்று பொருள்.[2]
இரவு நேரத்தில் பாலகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை கேட்டு மயங்கிய கோபியர்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியே வந்து, பாலகிருஷ்ணருடன் தனிமையில் இரவு முழுவதும் ராசலீலை நடனத்தில் ஈடுபடுவர்.