காலனிய சிங்கப்பூர்
From Wikipedia, the free encyclopedia
காலனிய சிங்கப்பூர் அல்லது குடிமைப்பட்ட கால சிங்கப்பூர் என்பது 1946 முதல் 1958 வரை ஐக்கிய இராச்சிய முடியாட்சியின் கீழ் சிங்கப்பூர் ஆட்சி செய்யப்பட்டதைக் குறிப்பிடுவதாகும். இந்தக் காலக்கட்டத்தில், கிறிஸ்துமசு தீவு, கொக்கோசு (கீலிங்) தீவுகள் மற்றும் லபுவான் ஆகிய பிரதேசங்கள் சிங்கப்பூரில் இருந்து நிர்வாகம் செய்யப்பட்டன.
காலனிய சிங்கப்பூர் Colony of Singapore Tanah Jajahan Singapura (1946–1958) சிங்கப்பூர் மாநிலம் (1958–1963) | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1946–1963 | |||||||||||||||||
குறிக்கோள்: முன்னேறட்டும் சிங்கப்பூர் பிரான்சிய மொழி: Dieu et mon droit (1946–1959) (ஆங்கிலம்: "God and my right") Majulah Singapura (1959–1963) (ஆங்கிலம்: "Onward Singapore") | |||||||||||||||||
நாட்டுப்பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்" (1946–1952) "பிரித்தானிய நாட்டுப்பண்" (1952–1959) முன்னேறட்டும் சிங்கப்பூர் "Majulah Singapura" (1959–1963) (ஆங்கிலம்: "Onward Singapore") [1] | |||||||||||||||||
நிலை | முடியாட்சி | ||||||||||||||||
தலைநகரம் | சிங்கப்பூர் மாநகரம் 1.30°N 103.85°E / 1.30; 103.85 | ||||||||||||||||
அதிகாரக்பூர்வ மொழி தேசிய மொழி | ஆங்கிலம் | ||||||||||||||||
பொது மொழிகள் | |||||||||||||||||
அரசாங்கம் | அரசியல்சட்ட முடியாட்சி | ||||||||||||||||
அரசர் | |||||||||||||||||
• 1946–1952 | ஆறாம் ஜோர்ஜ் | ||||||||||||||||
• 1952–1963 | இரண்டாம் எலிசபெத் | ||||||||||||||||
சிங்கப்பூர் ஆளுநர்களின் பட்டியல் | |||||||||||||||||
• 1946–1952 | சர் பிராங்கிளின் கிம்சன் | ||||||||||||||||
• 1952–1955 | சர் ஜான் பியர்ன்ஸ் நிகோல் | ||||||||||||||||
• 1955–1957 | சர் ராபர்ட் பிளாக் | ||||||||||||||||
• 1957–1959 | சர் வில்லியம் கூட் | ||||||||||||||||
• 1959–1963 | யூசுப் இசாக் | ||||||||||||||||
சிங்கப்பூர் பிரதமர்கள் | |||||||||||||||||
• 1955–1956 | டேவிட் மார்சல் | ||||||||||||||||
• 1956–1959 | லிம் இயூ கோக் | ||||||||||||||||
• 1959–1963 | லீ குவான் யூ | ||||||||||||||||
சட்டமன்றம் | சிங்கப்பூர் சட்ட மேலவை (1946–1955) சிங்கப்பூர் சட்டமன்றம் (1955–1963) | ||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிரித்தானியப் பேரரசு · பனிப்போர் | ||||||||||||||||
• நீரிணை குடியேற்றங்கள் கலைப்பு | 1 ஏப்ரல் 1946 | ||||||||||||||||
15 சூலை 1946 | |||||||||||||||||
• மாநகரத் தகுதி; ஆறாம் ஜோர்ஜ் | 1951 | ||||||||||||||||
23 நவம்பர் 1955 | |||||||||||||||||
1 அக்டோபர் 1958 | |||||||||||||||||
• பிரித்தானியப் பேரரசு தன்னாட்சி | 1959 | ||||||||||||||||
• மலேசியாவுடன் இணைப்பு | 16 செப்டம்பர் 1963 | ||||||||||||||||
நாணயம் |
| ||||||||||||||||
நேர வலயம் | சிங்கப்பூர் நேரம் ஒ.ச.நே + 08:00 | ||||||||||||||||
திகதி அமைப்பு | dd-mm-yyyy | ||||||||||||||||
வாகனம் செலுத்தல் | இடதுபுறம் | ||||||||||||||||
| |||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | சிங்கப்பூர்; ஆஸ்திரேலியா; மலேசியா | ||||||||||||||||
குறிப்புகள்
|
1945-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு முடிவடைந்த பின்னர்; அதே காலக்கட்டத்தில் நீரிணை குடியேற்றங்கள் எனும் பிரித்தானிய நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் காலனிய சிங்கப்பூர் எனும் புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரித்தானிய முடியாட்சியின் அதிகாரம், அப்போதைய சிங்கப்பூர் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1958-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் குடியேற்றப் பகுதிக்கு மாநிலம் எனும் தனி மாநிலத் தகுதி வழங்கப்படும் வரையில், காலனிய சிங்கப்பூர் எனும் பிரித்தானிய முடியாட்சி நிர்வாகம் நீடித்தது.[2] 1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு முழு உள் சுயாட்சி வழங்கப்பட்டது.[3]
சில ஆண்டுகள் தன்னாட்சிக்குப் பிறகு 16 செப்டம்பர் 1963-இல், மலாயா, சரவாக் மற்றும் வடக்கு போர்னியோ எனும் சபா; ஆகிய பிரதேசங்களுடன் சிங்கப்பூர் இணைந்து மலேசியா எனும் கூட்டமைப்பை உருவாக்கியது. இதன் மூலம் [[சிங்கப்பூர்]|சிங்கப்பூரில்]] 144 ஆண்டுகால பிரித்தானிய ஆட்சி முற்றிலுமாக ஒரு முடிவுக்கு வந்தது.
மலேசியக் கூட்டமைப்பின் அரசியல், பொருளாதாரம் மற்றும் இனம் தொடர்பான பிரச்சினைகளின் காரணமாக, ஆகஸ்டு 9, 1965-இல் சிங்கப்பூர்; அந்தக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, தன்னை ஒரு சுதந்திர இறையாண்மை நாடாக அறிவித்தது.