மங்கோலியர்களின் கீவ உரூசு மீதான படையெடுப்பு
மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பின் ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
உருசியா மீதான மங்கோலியப் படையெடுப்பானது மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசானது கீவ உரூசு' மீது படையெடுத்து வென்றது. ரியாசான், கோலோம்னா, மாஸ்கோ, விளாடிமிர் மற்றும் கீவ் ஆகிய ஏராளமான நகரங்களை அழித்தது.[4][5]
கிழக்கு ஐரோப்பா மீதான மங்கோலியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஐரோப்பா மீதான மங்கோலியப் படையெடுப்பு, 1236-1242 |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மங்கோலியப் பேரரசு |
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பலம் | |||||||
1236:
| 1236:
|
||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை | 5,00,000 (உரூசின் மக்கள் தொகையில் 6–7%)[3] |
இந்த படையெடுப்புகளானவை மே 1223 ஆம் ஆண்டு கல்கா ஆற்று யுத்தத்தின்போது ஆரம்பிக்கப்பட்டன. இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் பல்வேறு உரூசு' வேள் பகுதிகளின் படைகளைத் தோற்கடித்தனர். எனினும் இறுதியில் பின்வாங்கினார். படு கான் தலைமையிலான முழுமையான உரூசு' படையெடுப்பானது 1237 முதல் 1242 வரை இதற்குப் பின்னர் நடைபெற்றது. ஒகோடி கான் இறந்த பிறகு அடுத்த கான் யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டிய நிகழ்வு காரணமாக இந்த படையெடுப்பு முடித்துக் கொள்ளப்பட்டது. அனைத்து வேள் பகுதிகளும் மங்கோலிய ஆட்சிக்கு அடிபணிய வைக்கப்பட்டன. தங்க நாடோடிக் கூட்ட பேரரசின் பகுதியாக மாறின. இவற்றில் சில வேள் பகுதிகள் 1480 ஆம் ஆண்டுவரை இவ்வாறு தொடர்ந்தன.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் கீவ் அரசின் சிதறலின் ஆரம்பத்தால் இந்தப் படையெடுப்பு நடைபெறும் சூழ்நிலை மங்கோலியர்களுக்கு எளிதாக இருந்தது. கிழக்கு ஐரோப்பாவின் வரலாற்றிற்கு இந்த படையெடுப்புகள் எண்ணிலடங்காத கிளர்ச்சிகளை உண்டாக்கின. உதாரணமாக கிழக்கு ஸ்லாவிய மக்கள் மூன்று வெவ்வேறு நாடுகளாக பிரிந்தனர். அவை தற்கால உருசியா, உக்ரைன் மற்றும் பெலருஸ்.[6] மேலும் இந்த படையெடுப்புகளின் காரணமாக மாஸ்கோவின் கிராண்ட் டச்சி வளர்ச்சியடைந்தது.