மார்க்கெட் கார்டன் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
மார்க்கெட் கார்டன் (ஆங்கிலம் : Operation Market Garden) 1944ல் இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. செப்டம்பர் 17-25 தேதிகளில் நெதர்லாந்து, மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது நிகழ்ந்தது. நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் மீது படையெடுப்பதற்காக, அதன் ஆக்கிரமிப்பின் கீழிருந்த நெதர்லாந்து நாட்டில் சில முக்கிய பாலங்களைக் கைப்பற்ற விரும்பின. அதற்காகப் பல்லாயிரக்கணக்கான வான்குடை வீரர்களைக் கொண்டு அப்பாலங்களின் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலுக்கு அவை இட்ட குறிப்பெயர் தான் “மார்க்கெட் கார்டன் நடவடிக்கை”. இதுவே உலக வரலாற்றில் மிகப்பெரிய வான்குடை படைத்தாக்குதலெனக் கருதப்படுகிறது. இப்போரின் நிலவரம் ஆரம்பத்தில் நேச நாட்டுப்படைகளுக்குச் சாதகமாக இருந்தாலும் இறுதியில் அவைகளால் தங்கள் இறுதி இலக்கினை அடையமுடியவில்லை. ஜெர்மனிக்கு இயற்கை அரணாக விளங்கிய ரைன் ஆற்றை பெரும் படையுடன் கடப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் 1944ம் ஆண்டிற்குள் நாசி ஜெர்மனியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நேசநாட்டுத் திட்டம் நிறைவேறவில்லை.
மார்க்கெட் கார்டன் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி | |||||||
செப்டம்பர் 1944ல் நெதர்லாந்தில் தரையிறங்கும் நேசநாட்டு வான்குடை வீரர்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா போலந்து சுதந்திரப் படை டச் எதிர்ப்புப் படை கனடா | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பெர்னார்ட் மோன்கோமரி லூயில். ஹெச். பிரேர்டன் மைல்ஸ் டெம்சி பிரடரிக் பிரவுனிங் | கெர்டு வான் ரன்ஸ்டெட் வால்டர் மோடல் கர்ட் ஸ்டூடண்ட் வில்லம் பிட்ரிக் கஸ்டாவ்-அடால்ஃப் வான் சாங்கன் |
||||||
பலம் | |||||||
மார்கெட்: 34,600 கார்டன்: 50,000 மொத்தம்:84,600 | கணிக்கப்படவில்லை | ||||||
இழப்புகள் | |||||||
15,130–17,200 பேர்[1] | 26,800–29,300 பேர்[1][2][3] 30 டாங்குகள், தானுந்து பீரங்கிகள்[3] 159 aircraft[3] |
||||||