மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
From Wikipedia, the free encyclopedia
மெக்சிகோ அமெரிக்கப் போர் என்பது 1846-1848 ஆண்டுகளில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைக் குறிக்கும். 1845ம் ஆண்டு அமெரிக்கா, டெக்சாசைத் தன்னுடன் இணைத்துக்கொண்டதை எதிர்த்து மெக்சிகோ இப்போரை நடத்தியது. 1836 ல் டெக்சாசு மெக்சிகோவுக்கு எதிராகப் புரட்சி நடத்தி மெக்சிகோவில் இருந்து பிரிந்தாலும் மெக்சிகோ டெக்சாசைத் தன்னுடைய பகுதியாகக் கருதியது.
மெக்சிகோ-அமெரிக்கப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வெரகுருசு சண்டையின் படம் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
ஐக்கிய அமெரிக்கா கலிபோர்னியா குடியரசு [1] | மெக்சிக்கோ | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
ஜேம்சு போல்க் வின்பீல்ட் இசுக்காட்டு சக்கரி தைலர் இசுடீபன் கார்னி ஜான் இசுலோட் வில்லியம் வொர்த்து ராபர்ட் இசுக்காட்டன் சோசப்பு லேன் பிராங்களின் பியர்சு தேவீது கன்னர் மாத்யு பெர்ரி கிட் கார்சன் | அன்டோனியோ லோபசு தே சாந்தா அனா மரியான அரிசுட்டா பெட்ரோ தே அம்புடியா உசே மரியா புளோரசு மரியானோ பயேகோ நிக்கோலசு பிராவோ உசே சோக்குயின் டே கரெரா ஆன்டீரிசு பி-கோ மானுவல் ஆர்மியோ மார்டின் பர்பெக்டோ தே காசு பெட்ரோ மரியா தே அனயா சாக்குயின் ரியா |
||||||||
பலம் | |||||||||
1846: 8,613[2] 1848: 32,000 படைவீரர்கள் 59,000 இரண்டாம் நிலை படைவீரர்கள்[3] | c. 34,000–60,000 படைவீரர்கள்[4] | ||||||||
இழப்புகள் | |||||||||
c. 13,283 படைவீரர்கள் | c. 16,000 படைவீரர்கள் |
1846ன் வசந்த காலத்திலிருந்து 1847ன் இலையுதிர் காலம் வரை பெரும் போர் நடைபெற்றது. அமெரிக்கப் படைகள் விரைவாக நியு மெக்சிகோவையும் கலிபோர்னியாவையும் கைப்பற்றின. வடகிழக்கு, வடமேற்கு மெக்சிகோவின் சில பகுதிகளையும் அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. அமெரிக்கக் கப்பற்படையின் பசிபிக்குப் பகுதிப்படை பாகா கலிபோர்னியாவின் தென் பகுதியிலுள்ள பல படைத்தளங்களைக் கைப்பற்றியது. மற்றொரு அமெரிக்கப்படை மெக்சிகோ நகரைக் கைப்பற்றியது. இப்போரில் அமெரிக்கா வெற்றிபெற்றது.
குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கையின் படி 15 மில்லியன் டாலர்களுக்கு மெக்சிகோ நியு மெக்சிகோ, ஆல்ட்டா கலிபோர்னியா பகுதிகளை அமெரிக்காவுக்கு அளித்தது. மெக்சிகோ அமெரிக்கக் குடிமக்களுக்குத் தர வேண்டிய 3.5 மில்லியன் டாலரை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. மெக்சிகோ டெக்சாசின் இழப்பை ஏற்றுக்கொண்டது, ரியோ கிராண்டே ஆற்றைத் தன் எல்லையாக ஏற்றுக்கொண்டது.
பசிபிக் கடற் பகுதி வரை அமெரிக்காவை விரிவடையச் செய்யவேண்டும் என்பதே சனநாயகக் கட்சியின் [5]தலைவர் அமெரிக்க அதிபர் ஜேம்சு போல்க்கின் குறிக்கோளாக இருந்தது. எனினும் இப்போர் அமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. விக் கட்சி அடிமை முறையை எதிர்ப்பவர்கள், ஏகாதிபத்தியக் கொள்கையை எதிர்ப்பவர்கள் இப்போரைக் கடுமையாக எதிர்த்தனர். இப்போரில் அதிக அமெரிக்க வீரர்களின் உயிர் பலியானதும், அதிகப் பணம் செலவழிக்கப்பட்டதும் விமர்சிக்கப்பட்டது. இப்போரினால் அரசியலில் அடிமைகளின் உரிமை பற்றி அதிகம் தருக்கம் செய்யப்பட்டது. அது அமெரிக்க உள்நாட்டுப் போர் நடக்கவும் காரணமாக இருந்தது.
இப்போர் மெக்சிகோவில் அமெரிக்காவின் முதல் தலையீடு என்றும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு என்றும், 1847 போர் என்றும், பல பெயர்களில் மெக்சிகோவில் அழைக்கப்படுகிறது.