அகமது ஷா துரானி
ஆப்கானிஸ்தானத்தில் முதல் அமீர் / From Wikipedia, the free encyclopedia
அகமது ஷா துரானி (Ahmad Shah Durrani, பஷ்தூ/பாரசீக மொழி: احمد شاه دراني, 1722 – 1773) ஆப்கானித்தானத்தின் முதல் அமீர் ஆவார். இவர் அகமது ஷா அப்தலி என்றும் அறியப்படுகிறார். இவர் அப்தாலி இனத்தின் தலைவர். மற்ற ஆப்கானிய தலைவர்களைவிட இவர் மிகுந்த செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்.[8][9][10][11] இவரது பிறப்புக் குறித்துத் தெளிவான குறிப்பு இல்லை. அப்போது ஆப்கானித்தான், பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் அகமது ஷா துரானி احمد شاه دراني, துரானிப் பேரரசின் முதலாம் எமீர் ...
அகமது ஷா துரானி احمد شاه دراني | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பாட்ஷா காஷி ஷா துர்ரி துர்ரான் ("மன்னர், முத்துக்களின் முத்து") | |||||||||
அகமது ஷா துரானியின் உருவப் படம், அண். 1757, பிரான்சின் தேசிய நூலகம் | |||||||||
துரானிப் பேரரசின் முதலாம் எமீர் | |||||||||
ஆட்சிக்காலம் | 1747–1772 | ||||||||
முடிசூட்டுதல் | சூன் 1747[1] | ||||||||
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது | ||||||||
பின்னையவர் | தைமூர் ஷா துரானி | ||||||||
பிறப்பு | அகமது கான் அப்தாலி 1720–1722[2]:287 ஹெறாத், ஹெறாத்தின் சதோசாய் சுல்தானகம் (தற்கால ஆப்கானித்தான்)[3] அல்லது முல்தான், முகலாயப் பேரரசு (தற்கால பாக்கித்தான்)[4][5][6] | ||||||||
இறப்பு | (அகவை 49–52)[2]:409 மருப், கந்தகார் மாகாணம், துராணிப் பேரரசு (தற்கால ஆப்கானித்தான்) | ||||||||
புதைத்த இடம் | சூன் 1772 | ||||||||
துணைவர் | இபத்துன்னிசா பேகம் (தி. 1757) | ||||||||
| |||||||||
அரசமரபு | துரானி அரசமரபு | ||||||||
தந்தை | மொகமம்து சமான் கான் அப்தாலி | ||||||||
தாய் | சர்கோனா அனா[7] | ||||||||
மதம் | சுன்னி இசுலாம் | ||||||||
அரச முத்திரை |
மூடு
இவரது ஆட்சியின்போது டில்லியில் வலுவற்றிருந்த மொகலாயப் பேரரசைப் பலமுறை தாக்கி லாகூர், காஷ்மீர் போன்ற பகுதிகளை கி.பி. 1748- ஆம் ஆண்டில் கைப்பற்றினார். டில்லி நகரம் கி..பி. 1756 - இல் இவரால் சூறையாடப்பட்டது. 14 ஜனவரி 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை வென்றார்.