அரித்துவார்
From Wikipedia, the free encyclopedia
அரித்துவார் (Haridwar) உள்ளூர் பலுக்கல்ⓘ) என்பது இந்தியாவின் உத்தரகண்ட்ட மாநிலத்தில் உள்ள அரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 228,832 ஆகும். இது மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது.[3]
அரித்துவார்
Mayapuri | |
---|---|
மேலிருந்து கடிகார திசையில்: ஹரனின் படித்துறையின் மாலைக் காட்சி, சண்டி தேவி கோயில், சண்டி தேவிக்கு கம்பிவடப் பாதை, கங்கை ஆற்றிலிருந்து தோற்றம், அரித்துவார் தொடருந்து நிலையம், ஹர் கி பவுரியில் கங்கா ஆரத்தி, சூரியன் மறையும் போது சிவ மூர்த்தி மற்றும் மானசா தேவி கோயில். | |
ஆள்கூறுகள்: 29.945°N 78.163°E / 29.945; 78.163 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | அரித்துவார் மாவட்டம் |
நகராட்சி | 1868 |
அரசு | |
• வகை | மாநகர சபை |
• நிர்வாகம் | அரித்துவார் மாநகராட்சி |
• மேயர் | அமித் சர்மா (இதேகா) |
• மாநகராட்சி ஆணையர் | அலோக் குமார் பாண்டே, இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மாநகரம் | 12.3 km2 (4.7 sq mi) |
ஏற்றம் | 314 m (1,030 ft) |
மக்கள்தொகை (2011)[1] | 2,28,832[2] |
• பெருநகர் | 2,31,338 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 249401 |
தொலைபேசி குறியீடு | +91-1334 |
வாகனப் பதிவு | UK-08 |
பாலின விகிதம் | 1.18[1] ♂/♀ |
இணையதளம் | haridwar |
இந்த நகரம் கங்கை ஆற்றின் வலது கரையில், சிவாலிக் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[4] அரித்துவார் இந்துக்களுக்கு புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு முதன்மையான சமய நிகழ்வுகள் நடக்கின்றன. மேலும் இது பல முதன்மையான வழிபாட்டு தலங்களுக்கு நுழைவாயிலாகவும் உள்ளது. அரித்துவாரில் நடக்கும் நிகழ்வுகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அரித்துவார் கும்பமேளாவின் போது, இலட்சக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அரித்வாரில் கூடி வீடுபேறு அடைவதற்காக தங்கள் பாவங்களைக் கழுவ கங்கைக் கரையில் சடங்கு புனித நீராடளை செய்கிறானர்.
தொன்மக் கதைகளின் படி அரித்துவார், உஜ்ஜெயினி, நாசிக், பிரயாகை ஆகிய நான்கு இடங்களில் அமுதத் துளிகள் இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[5] இறப்பில்லா வாழ்வு தரும் அமுதத்தைப் பெற தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து சமுத்திர மந்தனம் அல்லது பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமுதத்தை கருடன் சுமந்து சென்றபோது தற்செயலாக இந்த இடங்களில் சிந்தியது.[6] அமுதம் சிந்திய இடமான பிரம்ம குண்டம், ஹரனின் படித்துறை (ஹர் கி பவுரி அதாவது, "இறைவனின் அடிச்சுவடுகள்") அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் இது அரித்வாரின் மிகவும் புனிதமான காட் (படித்துறை) எனக் கருதப்படுகிறது.[7] இது கன்வார் யாத்திரையின் முதன்மை மையமாகவும் உள்ளது, இங்கு பல இலட்ச்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை எடுத்து நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து சிவன் கோவில்களில் தீர்த்தப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.[8] இன்று, இந்த நகரம் அதன் சமய முக்கியத்துவத்திற்கு அப்பாற்பட்டு, வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நகரத்தின் அருகாமையில் மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (SIDCUL) மற்றும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) மற்றும் அதனுடன் இணைந்த துணை நிறுவனங்கள் உருவாகி தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அரித்வார் இந்திய கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியின் பல்வண்ணக் காட்சியை வழங்குகிறது. புனித நூல்களில், இது கபிலஸ்தான், கங்காத்வார், மாயாபுரி என பலவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சோட்டா சார் தாம் (உத்தரகாண்டில் உள்ள நான்கு முக்கிய புனிதத் தலங்கள்) செல்லும் ஒரு வழியாகும். இத்தலத்தை சைவர்கள் (சிவ பக்தர்கள்) மற்றும் வைணவர்கள் ( விஷ்ணுவின் பக்தர்கள்) முறையே ஹர்த்வார் மற்றும் ஹரித்வார் என்று அழைக்கிறார்கள், ஹர் என்றால் சிவன் ஹரி என்றால் விஷ்ணு.