இமானுவேல் கோட்டை
கொச்சியில் உள்ள ஒரு சிதைந்த கோட்டை / From Wikipedia, the free encyclopedia
இமானுவேல் கோட்டை (Fort Emmanuel இது Fort Manuel என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சியின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டை ஆகும்.[1] இது போர்ச்சுகலின் மன்னர் முதலாம் மானுவல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஆசியாவின் முதல் போர்த்துகீசிய கோட்டை ஆகும்.[2]
விரைவான உண்மைகள் இமானுவேல் கோட்டை (Fort Manuel) Fortaleza do Cochim (Emanuel), அமைவிடம் ...
இமானுவேல் கோட்டை (Fort Manuel) Fortaleza do Cochim (Emanuel) | |
---|---|
அறியப்படாத கலைஞரின், கி.பி 1800 ஆண்டைய, உப்பங்கழிகளில் இருந்து, பிரித்தானிய கொடியுடன் கொச்சி கோட்டையின் நீர்வண்ன ஓவியம். | |
அமைவிடம் | இந்தியா, கொச்சி, கோட்டைக் கொச்சி |
ஆள்கூற்றுகள் | 9.9663°N 76.2391°E / 9.9663; 76.2391 |
கட்டப்பட்டது | 1503; 521 ஆண்டுகளுக்கு முன்னர் (1503) |
கட்டிட முறை | போர்த்துகீய |
மூடு
இந்த இடத்தின் தற்போதைய பெயரானது கோட்டைக் கொச்சி என்பதாகும். இந்த பெயர் இந்தக் கோட்டையினால் வந்தது. மட்டச்சேரிக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியானது பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என்றும் அழைக்கப்படுகிறது.