கன்னியாகுமரி மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1729.27 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம்
குமரி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
தமிழ்நாடு, இந்தியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 8.32°N 77.34°E / 8.32; 77.34 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 |
தலைமையகம் | நாகர்கோவில் |
வட்டங்கள் | அகத்தீஸ்வரம், கல்குளம், தோவாளை, விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | P.N. ஸ்ரீதர், இஆப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | டி. என். ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,672 km2 (646 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,70,374 |
• அடர்த்தி | 1,119/km2 (2,900/sq mi) |
மொழி | |
• ஆட்சிமொழி | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629 xxx |
தொலைபேசி குறியீட்டு எண் | 04652 - நாகர்கோவில் 04651 - மார்த்தாண்டம் |
வாகனப் பதிவு | தநா-74 & தநா-75 |
மக்களவை | கன்னியாகுமரி |
சட்டமன்ற தொகுதிகள் | 6 |
மாநகராட்சிகள் | 1 |
நகராட்சிகள் | 4 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வருவாய் வட்டங்கள் | 6 |
பேரூராட்சிகள் | 51 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 9 |
ஊராட்சிகள் | 95 |
வருவாய் கிராமங்கள் | 188 |
ஆண்-பெண் விகிதம் | ஆ-1000/பெ-1019 ♂/♀ |
கல்வியறிவு | 91.75% |
சராசரி கோடைகால வெப்பநிலை | 31 °C (88 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | கன்னியாகுமரி |
மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும்.
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.
இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.
2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற்பகுதிகளைக் கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் அழிவிற்கு உள்ளாக்கியது. 2017 நவம்பர் 29, 30 டிசம்பர் 01 ஆகிய நாட்களில் வீசிய ஓக்கி புயல் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.