காக்கத்தியர்
From Wikipedia, the free encyclopedia
காக்கத்தியர்கள் ஆந்திர அரச வம்சத்தவர்கள். அவர்கள் அதிகப்படியான ஆந்திர நிலங்களை, அதாவது இன்றைய நாட்களில் ஆந்திரப் பிரதேசம் என்றழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் பொ.ஊ. 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள்.[1] அவர்களின் தலைநகரமாய் ஓருகல்லு என்னும் நகரம் விளங்கியது. இன்றைய நாட்களில் அந்நகரம் வாரங்கல் என அழைக்கப்படுகிறது. காகத்தியர்கள் ஆரம்பத்தில் சமண மதத்தைப் பின்பற்றியதாகவும் பின்பு காலப் போக்கில் இந்து மதத்தின் அங்கமான சைவ சமயத்திற்கு மாறியதாகவும் வரலாறு உள்ளது. டெல்லி சுல்தான்களின் படையெடுப்பிற்கு முன்பு வரை நிலைத்திருந்த பல அரச வம்சங்களுள் இதுவும் ஒன்று.