சப்தகன்னியர்
இந்து தாய்தெய்வங்கள் / From Wikipedia, the free encyclopedia
இந்து சமயத்தில் சப்தகன்னியர் அல்லது சப்தமாதர் எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் சிவசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சப்த மாதாக்கள் எனவும் ஏழு கன்னியர்கள் எனவும் அறியப்படுகிறார்கள்.
தங்கள் குலதெய்வம் யாதென்று அறியாதவர்கள் சப்த கன்னியர்களை குலதெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.