பாக்கு நீரிணை
From Wikipedia, the free encyclopedia
பாக்கு நீரிணை (Palk Strait) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே உள்ள வங்காள விரிகுடாவை, தென்மேற்கே உள்ள பாக்கு விரிகுடாவுடன் இணைக்கிறது. இந்நீரிணை ஏறத்தாழ 137 கிலோமீட்டர் நீளமும், 53 முதல் 82 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. தமிழ்நாட்டின் வைகை உட்படப் பல ஆறுகள் இந்நீரிணையுடன் கலக்கின்றன. இந்தியாவில் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாண ஆளுநராக (1755–1763) இருந்த இராபர்ட் பாக் என்பவரின் பெயரில் இந்நீரிணை அழைக்கபப்டுகிறது.[1]
பாக்கு நீரிணை | |
---|---|
பாக்கு நீரிணை | |
பாக்கு நீரிணைப் பகுதியின் ஆழ்கடல் அளவியல் | |
அமைவிடம் | இலட்சத்தீவுக் கடல்–வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 10°00′N 79°45′E |
வகை | நீரிணை |
சொற்பிறப்பு | இராபர்ட் பாக்கு |
பெருங்கடல்/கடல் மூலங்கள் | இந்தியப் பெருங்கடல் |
வடிநில நாடுகள் | இந்தியா, இலங்கை |
அதிகபட்ச நீளம் | 137 கி.மீ. |
அதிகபட்ச அகலம் | 82 கி.மீ. |
குறைந்தபட்ச அகலம் | 53 கி.மீ. |
அதிகபட்ச வெப்பநிலை | 35 °C (95 °F) |
குறைந்தபட்ச வெப்பநிலை | 15 °C (59 °F) |
இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்காக 2004 ஆம் ஆண்டு திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.