மங்கோலியப் பேரரசின் பிரித்தல்
From Wikipedia, the free encyclopedia
மங்கோலியப் பேரரசின் பிரித்தலானது கி.பி. 1259ல் தியவோயு கோட்டை முற்றுகையின் போது மோங்கே கான் இறந்ததிலிருந்து ஆரம்பித்தது. டொலுய் குடும்ப உறுப்பினர்களிடையே உயர்ந்த கானின் பதவிக்காகப் போர் ஏற்பட்டது. இது, பெர்கே-ஹுலாகு போர்[1][Full citation needed] மற்றும் கயிடு-குப்லாய் போர் காரணமாக மங்கோலியப் பேரரசின் மேல் இருந்த உயர்ந்த கான் என்ற பதவியின் அதிகாரம் குறைந்தது. பேரரசானது தன்னாட்சி கொண்ட கானேடுகளாகப் பிரிந்தது. வடமேற்கில் தங்க நாடோடிக் கூட்டம், மத்தியில் சகதை கானேடு, தென்மேற்கில் இல்கானேடு மற்றும் கிழக்கில் தற்கால பெய்ஜிங்கைத் தலைநகராகக் கொண்ட யுவான் அரசமரபு எனப் பிரிந்தது. எனினும் யுவான் பேரரசர்கள் ககான் (உயர்ந்த கான்) என்னும் பட்டத்தைப் பெயரளவில் பயன்படுத்தினர். இந்த நான்கு கானேடுகளும் தங்களுக்கென்று தனி விருப்பங்கள் மற்றும் நோக்கங்களைப் பின்பற்றின. தனித்தனி காலகட்டங்களில் வீழ்ந்தன.
மங்கோலியப் பேரரசின் பிரிவுகள் | |
நாள் | கி.பி. 1259 - 1294 |
---|---|
அமைவிடம் | மங்கோலியப் பேரரசு |
பங்கேற்றோர் | இல்கானேடு, யுவான் வம்சம், சகதை கானேடு, தங்க நாடோடிக் கூட்டம் |
விளைவு | மங்கோலிய சாம்ராச்சியம் நான்கு தனித்தனி கானேடுகளாக உடைந்தது |