முக்தி தரும் ஏழு நகரங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
முக்தி தரும் ஏழு நகரங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் (Sapta Puri) (சமக்கிருதம்: सप्त-पुरी) என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள். புரி எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு நகரம் என்று பொருள். இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினாலேயே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.[1] முக்தி தரும் புனித நகரங்கள் வருமாறு: