சரத் பூர்ணிமா
From Wikipedia, the free encyclopedia
சரத் பூர்ணிமா (Sharad Purnima) குமார பூர்ணிமா, கோஜகரி பூர்ணிமா, நவன்ன பூர்ணிமா, [1] கௌமுடி பூர்ணிமா என்றும் அழைக்கபடும் இது அறுவடைத் திருநாளான கொண்டாடப்படுகிறது . இந்து சந்திர மாதமான ஐப்பசியில்(செப்டம்பர் முதல் அக்டோபர் வரை) பௌர்ணமி நாளில் இது மழைக் காலத்தின் முடிவில் கொண்டாடப்படிகிறது.வைக் குறிக்கிறது. இந்த புனித நாளில், சிவன், பார்வதி, இராதாகிருஷ்ணா மற்றும் இலட்சுமி, நாராயணன் போன்ற பல தெய்வீக இணைகள் சந்திரனுடன் வணங்கப்பட்டு பூக்கள் மற்றும் பாயசம் (அரிசி மற்றும் பாலால் செய்யப்பட்ட இனிப்பு உணவு) பிரசாதாமாக வழங்கப்படுகின்றன. கோயில்களில் உள்ள தெய்வங்கள் நிலவின் பிரகாசத்தைக் குறிப்பது போல பொதுவாக வெள்ளை நிற உடையணிந்திருப்பர். இந்த நாளில் பலர் முழு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் சரத் பூர்ணிமா அல்லது குமார பூர்ணிமா, வகை ...
சரத் பூர்ணிமா அல்லது குமார பூர்ணிமா | |
---|---|
சரத் பூர்ணிமா அன்று முழுநிலவு, 2017 | |
வகை | இந்து |
முக்கியத்துவம் | Arrival of Winters |
கொண்டாட்டங்கள் | தெய்வங்களை வழிபடுதல், பூக்கள் மற்றும் இனிப்பு உணவுகளை வழங்குதல், நடனம் (ராசலீலை / கர்பா நடனம்) |
தொடக்கம் | முழு நிலவு நாள், ஐப்பசி |
நாள் | ஐப்பசி முழுநிலவு |
நிகழ்வு | வருடாந்திரத் திருவிழா |
தொடர்புடையன | லட்சுமி (இந்துக் கடவுள்) விஷ்ணு, இராதா கிருஷ்ணன், சிவன் பார்வதி, நிலா |
மூடு