அலாவுதீன் கில்சி
கல்சி அரசமரபின் துருக்கிய-ஆப்கானிய சுல்தான் (ஆட்சி. 1296-1316) / From Wikipedia, the free encyclopedia
அலாவுதீன் கல்சி (ஆட்சி. 1296-1316) என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட கல்சி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவரது இயற்பெயர் அலி குர்ஷஸ்ப் ஆகும். வருவாய், விலைவாசி கட்டுப்பாடுகள் மற்றும் சமூகம் தொடர்பான, முக்கியமான ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிர்வாக சீர்திருத்தங்களை அலாவுதீன் தொடங்கி வைத்தார். இந்தியா மீதான பல மங்கோலிய படையெடுப்புகளிலிருந்தும் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார்.
அலாவுதீன் கல்சி علاءالدین خِلجی | |||||
---|---|---|---|---|---|
சுல்தான் சிக்கந்தர்-இ-சானி (இரண்டாம் அலெக்சாந்தர்) | |||||
அலாவுதீன் கல்சி குறித்த ஒரு 17ஆம் நூற்றாண்டு ஓவியம் | |||||
13வது தில்லி சுல்தான் | |||||
ஆட்சிக்காலம் | 19 சூலை 1296–4 சனவரி 1316 | ||||
முடிசூட்டுதல் | 21 அக்டோபர் 1296 | ||||
முன்னையவர் | ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி | ||||
பின்னையவர் | சிகாபுதீன் ஒமர் | ||||
அவத்தின் ஆளுநர் | |||||
காலம் | அண். 1296–19 சூலை 1296 | ||||
காராவின் ஆளுநர் | |||||
காலம் | அண். 1266–1316 | ||||
முன்னையவர் | மாலிக் சஜ்ஜு | ||||
பின்னையவர் | அலாவுல் முல்க் | ||||
அமீர்-இ-துசுக் (நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடுபவருக்கு ஒப்பானது) | |||||
காலம் | அண். 1290–1291 | ||||
பிறப்பு | அலி குர்ஷஸ்ப் அண். 1266 | ||||
இறப்பு | 4 சனவரி 1316(1316-01-04) (அகவை 49–50) தில்லி (தற்கால இந்தியா) | ||||
புதைத்த இடம் | அலாவுதீன் கல்சியின் மதராசா மற்றும் சமாதி, தில்லி[1] | ||||
துணைவர் |
| ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
மரபு | கில்ஜி வம்சம் | ||||
தந்தை | சிகாபுதீன் மசூத் (ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜியின் அண்ணன்) | ||||
மதம் | சன்னி இசுலாம் |
அடிமை அரசமரபினரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு ஜலாலுதீன் தில்லி சுல்தானாக மாறிய நேரத்தில், அலாவுதீனுக்கு அமீர்-இ-துசுக் என்ற பதவி கொடுக்கப்பட்டது. இதன் பொருள் நிகழ்ச்சியை மேற்பார்வையிடுபவர் என்பதாகும். ஜலாலுதீனுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை ஒடுக்கியதற்குப் பிறகு 1291ஆம் ஆண்டு காராவின் ஆளுநர் பதவியை அலாவுதீன் பெற்றார். பில்சா மீதான ஒரு வருவாய் ஈட்டிய ஊடுருவலுக்கு பிறகு1296இல் அவத்தின் ஆளுநர் பதவியை பெற்றார். 1296இல் அலாவுதீன் தேவகிரி மீது ஊடுருவல் நடத்தினார். ஜலாலுதீனுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான கிளர்ச்சியை நடத்துவதற்கு தேவையான கொள்ளைப் பொருட்களை பெற்றார். ஜலாலுதீனைக் கொன்றதற்குப் பிறகு, தில்லியில் இவர் தனது ஆட்சியை நிலைப்படுத்தினார். முல்தானிலிருந்த ஜலாலுதீனின் மகன்களை அடிபணிய வைத்தார்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு சகதாயி கானரசில் இருந்து வந்த மங்கோலிய படையெடுப்புகளிலிருந்து அலாவுதீன் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார். இதில் ஜரன்-மஞ்சூர் (1297-1298), சிவிஸ்தான் (1298), கிளி (1299), தில்லி (1303), மற்றும் அம்ரோகா (1305) ஆகிய படையெடுப்புகள் அடங்கும். 1306இல் இவரது படைகள் மங்கோலியர்களுக்கு எதிராக இராவி ஆற்றங்கரைக்கு அருகில் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றன. தற்கால ஆப்கானித்தானில் இருந்த மங்கோலிய நிலப்பரப்புகள் மீது பிறகு சூறையாடல் செய்தன. மங்கோலியர்களுக்கு எதிராக இவரது இராணுவத்திற்கு வெற்றிகரமாக தலைமை தாங்கிய இராணுவ தளபதிகளில் சாபர் கான், உலுக் கான் மற்றும் இவரது அடிமை-தளபதி மாலிக் கபூர் ஆகியோர் அடங்குவர்.
அலாவுதீன் குசராத்து (1299இல் ஊடுருவல், 1304இல் இணைத்து கொள்ளப்பட்டது), ஜெய்சால்மர் (1299), இரந்தம்பூர் (1301), சித்தோர் (1303), மல்வா (1305), சிவானா (1308) மற்றும் சலோர் (1311) ஆகிய இராச்சியங்களை வென்றார். இந்த வெற்றிகள் பல்வேறு இராசபுத்திர மற்றும் பிற இந்து அரச மரபுகளை முடிவுக்கு கொண்டு வந்தன. இதில் பரமாரப் பேரரசு, வகேலாக்களின் அரசமரபு, இரணதம்பபுரத்தின் சகாமனாக்கள் மற்றும் சலோர், குகிலாக்களின் இராவல் பிரிவினர் மற்றும் அநேகமாக யச்வபாலர்களையும் முடிவுக்கு கொண்டு வந்தன. விந்திய மலைத்தொடருக்கு தெற்கே பல்வேறு படையெடுப்புகளுக்கு இவரது அடிமை-தளபதி மாலிக் கபூர் தலைமை தாங்கினார். தேவகிரி (1308), வாரங்கல் (1310) மற்றும் துவாரசமுத்திரம் (1311) ஆகிய இடங்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான செல்வத்தை பெற்றார். இந்த வெற்றிகள் யாதவ முன்னரான இராமச்சந்திரா, காக்கத்திய மன்னரான பிரதாபருத்ரா மற்றும் போசளப் பேரரசின் மன்னராகிய மூன்றாம் பல்லாலா ஆகியோரை அலாவுதீனுக்கு திறை செலுத்துபவர்களாக ஆக்கின. கபூர் பாண்டிய நாட்டின் மீதும் ஊடுருவல் (1311) நடத்தினார். பெருமளவிலான செல்வம், யானைகள் மற்றும் குதிரைகளை பெற்றார்.
இவரது வாழ்வின் கடைசி ஆண்டுகளின் போது அலாவுதீனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. நிர்வாகத்தை கையாள மாலிக் கபூரை இவர் சார்ந்திருந்தார். 1316இல் இவரது இறப்பிற்கு பிறகு அலாவுதீன் மற்றும் அவரது இந்து மனைவி ஜத்யபாலியின் மகனாகிய சிகாபுதீனை ஒரு கைப்பாவை முடியரசராக மாலிக் கபூர் நியமித்தார். அலாவுதீனின் மூத்த மகன் குத்புதீன் முபாரக் ஷா இவரது இறப்பிற்கு சிறிது காலத்திலேயே ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.