மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு
குவாரசமியப் பேரரசு மீதான மங்கோலியப் படையெடுப்பு (1219-1221) / From Wikipedia, the free encyclopedia
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பானது கி.பி. 1219 முதல் கி.பி. 1221 வரை[4] நடைபெற்றது. இசுலாமிய நாடுகளை மங்கோலியர்கள் ஆக்கிரமித்ததன் தொடக்கத்தை இது குறித்தது. மங்கோலிய விரிவாக்கம் இறுதியில் சப்பான், எகிப்திய அடிமை வம்சம், இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா தவிர ஆசியாவின் (கிழக்கு ஐரோப்பாவின் பகுதிகள் உட்பட) அனைத்துப் பகுதிகளையும் வெற்றி கொண்ட பின்னரே முடிந்தது.
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் மத்திய ஆசியப் படையெடுப்பின் ஒரு பகுதி | |||||||||
குவாரசமியப் பேரரசு (கி.பி. 1190–கி.பி. 1220), மங்கோலியர்களின் வெற்றிக்கு முன்னர் | |||||||||
| |||||||||
நாடுகள் | |||||||||
மங்கோலியப் பேரரசு | குவாரசமியப் பேரரசு | ||||||||
மன்னர் மற்றும் தளபதிகள் | |||||||||
செங்கிஸ் கான் சூச்சி சகதை ஒகோடி டொலுய் சுபுதை செபே செல்மே முகலி குபிலை கசர் பூர்ச்சு சோர்கன்-சீரா |
அலாவுதீன் முகம்மது சலாலத்தீன் மிங்புர்னு இனல்சுக் தெமுர் மாலிக் | ||||||||
படை வகைகள் | |||||||||
குதிரை வில்லாளர்கள், ஈட்டியுடைய கனரக குதிரைப்படை, துணைப்படைகள், பொறியாளர்கள், மற்றும் வல்லுநர்கள், முற்றுகை இயந்திரங்கள் (சீன வெடிமருந்து ஆயுதங்கள் உட்பட), சேர்க்கப்பட்ட குவாரசமிய குடிமக்கள் |
பெரும்பாலும் கோட்டை காவல்படையினர் | ||||||||
எண்ணிக்கை | |||||||||
*150,000-2,00,000[1] | *400,000[1] | ||||||||
உயிர்ச்சேதங்கள் | |||||||||
தெரியவில்லை | குடிமக்கள் உட்பட 12.5 இலட்சம் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது (25% மக்கள் தொகை)[2] (எனினும் நவீன வரலாறாளர்கள் இதற்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, இதனை மறுக்கின்றனர்)[3] |
உண்மையில் குவாரசமியப் பேரரசின் மீது படையெடுக்க வேண்டும் என்பது மங்கோலியப் பேரரசின் எண்ணமே கிடையாது. பாரசீக வரலாற்றாளர் ஜுஸ்ஜனியின் கூற்றுப்படி செங்கிஸ் கான் குவாரசமிய ஆட்சியாளரான அலாவுதீன் முகம்மதுவுக்கு வணிகம் வேண்டி ஒரு செய்தி அனுப்பினார். அவரை அண்டையவர் என்று குறிப்பிட்டார். "சூரியன் உதிக்கும் நிலப்பரப்புகளை நான் ஆட்சி செய்கிறேன் அதே நேரத்தில் சூரியன் மறையும் நிலப்பரப்புகளை நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள். நாம் இருவரும் நட்பு மற்றும் அமைதிக்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோம்". அல்லது செங்கிஸ் கான் கூறியதாவது: "சூரியன் உதிக்கும் நிலங்களின் கான் நான் அதே நேரத்தில் சூரியன் மறையும் நிலங்களின் சுல்தான் நீங்கள்: நாம் இருவரும் நட்பு மற்றும் அமைதிக்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோம்."[5] மங்கோலியர்கள் உண்மையில் "தோல் கூடாரங்களில் வாழ்ந்த மக்களை" ஒன்றிணைத்தது, மங்கோலியாவின் நாடோடிப் பழங்குடியினர், பிறகு துருக்கியர்கள் மற்றும் பிற நாடோடி மக்கள் ஆகியவர்களை ஒன்றிணைத்த போது மிகச் சிறிதளவே இரத்தம் சிந்தப்பட்டது, மற்றும் எந்தவொரு பொருள் சேதமும் கிட்டத்தட்ட ஏற்படவில்லை. ஆனால், சுரசன்கள் உடனான மங்கோலியப் போர்கள் மங்கோலியர்கள் எந்த அளவுக்கு இரக்கமற்றவர்களாக இருக்கக்கூடியவர்கள் என்பதைக் காட்டியது. ஷா முகம்மது முழு மனதின்றி இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், அதுவும் நீடிக்கவில்லை. ஓர் ஆண்டுக்குள்ளாகவே போர் ஆரம்பமானது. மங்கோலிய வணிக வண்டி மற்றும் அதன் தூதர்கள் குவாரசமிய நகரமான ஒற்றாரில் படுகொலை செய்யப்பட்டனர்.
போர் நடந்த காலம் சுமார் இரண்டு வருடங்களுக்கு சற்றே குறைவானது ஆகும். இப்போரில் குவாரசமியப் பேரரசு அழிந்தது. 19ஆம் நூற்றாண்டு கிழக்கியலாளர் ஈ. ஜி. பிரவுனின் கூற்றுப் படி, செங்கிஸ் கானின் தூதர்களை இனல்சுக் கொன்ற நிகழ்வானது உலக வரலாற்றில் வேறு எந்த நிகழ்வையும் விட மனித இனத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியது ஆகும்.