மௌரியப் பேரரசு
பண்டைக்கால இந்தியப் பேரரசு (கி. மு. 322 - கி. மு. 184) / From Wikipedia, the free encyclopedia
மௌரியப் பேரரசு (Maurya Empire, பொ.ஊ.மு. 322 – பொ.ஊ.மு. 184) என்பது மகதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்தில் இரும்புக் காலத்தில் புவியியல் ரீதியாக விரிவடைந்திருந்த ஒரு வரலாற்றுச் சக்தியாகும். இது பொ.ஊ.மு. 322இல் சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்டது. பொ.ஊ.மு. 185 வரை நீடித்திருந்தது.[21] சிந்து கங்கைச் சமவெளியை வென்றதன் மூலம் மௌரியப் பேரரசானது மையப்படுத்தப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரத்தில் (தற்கால பட்னா) அமைந்திருந்தது. ஏகாதிபத்திய மையத்திற்கு வெளியே பேரரசின் புவியியல் விரிவானது பேரரசு முழுவதும் தெளித்தது போல் பரவியிருந்த ஆயுதம் கொண்ட நகரங்களைக் கட்டுப்படுத்திய இராணுவத் தளபதிகளின் விசுவாசத்தைச் சார்ந்திருந்தது.[6][22][23] அசோகரின் (அண். பொ.ஊ.மு. 268 - பொ.ஊ.மு. 232) ஆட்சியின் போது பேரரசானது குறுகிய காலத்திற்கு இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய நகர மையங்கள் மற்றும் நெடுஞ்சாலைக் குடியிருப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொலைதூரத் தென்னிந்தியாவில் இருந்த பகுதிகள் தவிர மற்ற பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. அசோகரின் ஆட்சிக் காலம் முடிந்து சுமார் 50 ஆண்டுகள் கழித்து இது வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பிரகத்ரதரைப் புஷ்யமித்திர சுங்கன் அரசியல் கொலை செய்து மகதத்தில் சுங்கப் பேரரசை நிறுவியதற்குப் பிறகு பொ.ஊ.மு. 185இல் இப்பேரரசு கலைக்கப்பட்டது.
மௌரியப் பேரரசு மௌரிய சாம்ராச்சியம் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ.மு. 322–பொ.ஊ.மு. 184 | |||||||||||||||||||||
தலைநகரம் | பாடலிபுத்திரம் (தற்கால பட்னா, பீகார்) | ||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | மாகதிப் பிராகிருதம் | ||||||||||||||||||||
சமயம் | |||||||||||||||||||||
அரசாங்கம் | முற்றிலுமான முடியரசு, (சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள படி) மற்றும் இராஜமண்டலம்[18] | ||||||||||||||||||||
சாம்ராட் | |||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 322 - பொ.ஊ.மு. 298 | சந்திரகுப்த மௌரியர் | ||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 298 - பொ.ஊ.மு. 272 | பிந்துசாரர் | ||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 268 - பொ.ஊ.மு. 232 | அசோகர் | ||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 232 - பொ.ஊ.மு. 224 | தசரத மௌரியர் | ||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 224 - பொ.ஊ.மு. 215 | சம்பிரதி | ||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 215 - பொ.ஊ.மு. 202 | சாலிசுகா | ||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 202 - பொ.ஊ.மு. 195 | தேவவர்மன் | ||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 195 - பொ.ஊ.மு. 187 | சத்தாதன்வன் | ||||||||||||||||||||
• பொ.ஊ.மு. 187 - பொ.ஊ.மு. 184 | பிரகத்திர மௌரியன் | ||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||||||||||||||
• நந்தப் பேரரசை வெல்லுதல் | பொ.ஊ.மு. 322 | ||||||||||||||||||||
• புஷ்யமித்திர சுங்கரால் பிரிகத்ரதர் அரசியல் கொலை செய்யப்படுதல் | பொ.ஊ.மு. 184 | ||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||
பொ.ஊ.மு. 261[19] (உச்ச பட்ச பரப்பளவின் குறைந்த பட்ச மதிப்பீடு) | 3,400,000 km2 (1,300,000 sq mi) | ||||||||||||||||||||
பொ.ஊ.மு. 250[20] (உச்ச பட்ச பரப்பளவின் அதிக பட்ச மதிப்பீடு) | 5,500,000 km2 (2,100,000 sq mi) | ||||||||||||||||||||
நாணயம் | பணம் | ||||||||||||||||||||
|
அர்த்தசாஸ்திரத்தின் ஆசிரியரும்,[24] தனது வழிகாட்டியுமான சாணக்கியரின் வழிகாட்டுதலில் சந்திரகுப்த மௌரியர் ஓர் இராணுவத்தைத் திரட்டினார். நந்தப் பேரரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார். அண். பொ.ஊ.மு. 322இல் மௌரியப் பேரரசுக்கு அடித்தளத்தை நிறுவினார். பேரரசர் அலெக்சாந்தரால் ஏற்படுத்தப்பட்டிருந்த சத்ரப்புகளைத் தோற்கடித்ததன் மூலம் மேற்கு திசையில் நடு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் தனது சக்தியைச் சந்திரகுப்தர் வேகமாக விரிவாக்கினார். பொ.ஊ.மு. 317 வாக்கில் வட இந்தியா முழுவதையும் இவரது பேரரசு கொண்டிருந்தது.[25] மௌரியப் பேரரசானது பிறகு, செலுக்கியர்-மௌரியர் போரின் போது ஒரு தியாடோச்சியும், செலூக்கியப் பேரரசை நிறுவியவருமான செலூக்கஸ் நிக்காத்தரைத் தோற்கடித்து, சிந்து ஆற்றுக்கு மேற்கே ஆப்கானித்தான் மற்றும் பலுச்சிசுத்தானம் ஆகிய நிலப்பரப்புகளைப் பெற்றது.[26][27]
மௌரியர்களுக்குக் கீழ் உட்புற மற்றும் வெளிப்புற வணிகம், விவசாயம் மற்றும் பொருளாதாரச் செயல்கள் செழித்தன. தெற்கு ஆசியா முழுவதும் பரவின. ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான நிதி, நிர்வாக மற்றும் பாதுகாப்பு அமைப்பின் உருவாக்கம் காரணமாகச் செழித்தன. மௌரிய அரசமரபானது பாடலிபுத்திரத்திலிருந்து, தக்சசீலம் வரை பெரும் தலைநெடுஞ்சாலைக்கான ஒரு முன்னோடியைக் கட்டமைத்தது.[28] கலிங்கப் போருக்குப் பிறகு அசோகருக்குக் கீழ் பேரரசானது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால மையப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கொண்டிருந்தது. அசோகர் பௌத்தத்தைத் தழுவியதும், பௌத்தத் தூதர்களுக்கு ஆதரவளித்ததும், பௌத்தமானது இலங்கை, வடமேற்கு இந்தியா, மற்றும் நடு ஆசியாவுக்கு விரிவடைவதற்குக் காரணமானது.[29]
மௌரியக் காலத்தின் போது, தெற்காசியாவின் மக்கள் தொகையானது 1.5 கோடி முதல் 3 கோடி வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.[30] கலை, கட்டடக்கலை, கல்வெட்டுக்கள் மற்றும் உருவாக்கப்பட்ட நூல்கள்[6] ஆகியவற்றில் வழக்கத்திற்கு மீறிய உருவாக்கத்தால் இப்பேரரசின் காலமானது குறிப்பிடப்படுகிறது. ஆனால், கங்கைச் சமவெளியில் சாதி நிறுவப்பட்டது, இந்தியாவின் முதன்மையான இந்தோ ஆரிய மொழிகள் பேசும் பகுதிகளில் பெண்கள் உரிமை குறைந்தது ஆகியவற்றுக்கும் இக்காலம் குறிப்பிடப்படுகிறது.[31] தொல்லியல் ரீதியாகத் தெற்காசியாவில் மௌரியரின் ஆட்சிக் காலமானது வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்தின் கீழ் வருகிறது. அர்த்தசாஸ்திரமும்,[32] அசோகரின் கல்வெட்டுகளும் மௌரியக் காலம் குறித்த முதன்மையான எழுத்துப் பதியப்பட்ட ஆதாரங்கள் ஆகும். இந்தியாவின் தேசியச் சின்னமாகச் சாரநாத்தில் உள்ள சிங்கத் தூபி உள்ளது.