சாதவாகனர்
From Wikipedia, the free encyclopedia
சாதவாகனர் (Sātavāhanas) என்போர் தக்காணப் பகுதியில் நிலைகொண்டிருந்த பண்டைய இந்திய அரச மரபினராவர். புராணங்களில் இவர்கள் ஆந்திரர் எனவும் அழைக்கப்பட்டனர். சாதவாகன ஆட்சி பொ.ஊ.மு. 1-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக இன்றைய வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். வேறு சிலர் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு காலம் முதலே இவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறுகின்றனர். சாதவாகன இராச்சியம் இன்றைய தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில் இவர்கள் இன்றைய குசராத்து, மத்தியப் பிரதேசம், கருநாடகம் ஆகிய பகுதிகளையும் ஆண்டனர். இவ்வம்சத்தின் தலைநகராக பிரதித்தானா மற்றும் அமராவதி ஆகிய நகரங்கள் இருந்துள்ளன.
சாதவாகனப் பேரரசு (ஆந்திராக்கள்) | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கி. மு. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி–கி. பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் | |||||||||||||||||||||
தெற்கு ஆசியா
0-50 CE மித்திரர்கள்
உயேசிகள்
MAPS
-500 -150 120 350 500 600 800 1000 1175 1250 1400 1500 | |||||||||||||||||||||
தலைநகரம் | பைத்தான் அமராவதி | ||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பிராகிருதம் சமசுகிருதம்[3] | ||||||||||||||||||||
சமயம் | இந்து சமயம்[4][5] பௌத்தம் | ||||||||||||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||||||||||||
மன்னர் | |||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரிய இந்தியா | ||||||||||||||||||||
• தொடக்கம் | கி. மு. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி | ||||||||||||||||||||
• முடிவு | கி. பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா[6] |
இவ்வம்சத்தின் மூலம் அறியப்படாவிடினும், புராணங்களின் படி, இவர்களது முதலாவது மன்னர் கண்ணுவ குலத்தை தோற்கடித்துள்ளார். மௌரியர்களுக்குப் பின்னரான காலத்தில், தக்காணப் பகுதியில் சாதவாகனர் வெளியுலகத் தாக்குதல்களை முறியடித்து அமைதியை நிலைநாட்டினர். குறிப்பாக சகர்கள் மேற்கு சத்ரபதிகள் ஆகியோருடனான சமர்கள் நீண்ட காலம் தொடர்ந்திருந்தன. சாதவாகனர் கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சிக் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த வசித்திபுத்திர புலாமவியின் காலத்திலும் தமது உச்ச நிலையை எட்டியிருந்தனர். பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டில் இவர்கள் சிறிய மாநிலங்களாக சிதறிப் போயினர்.[7]
சாதவாகனர் ஆட்சியில் தமது உலோக நாணயங்களில் ஆட்சியாளர்களின் உருவங்களைப் பொறித்தவர்களில் முதன்மையானவர்கள் ஆவர். இவர்கள் சிந்து-கங்கைச் சமவெளி முதல் இந்தியாவின் தென்முனை வரை கலாச்சாரப் பாலங்களை அமைத்தனர், அவர்களுடனான வணிகத்தில் முக்கிய பங்காற்றினர். பிராமணம் மட்டுமல்லாது, பௌத்தத்தையும் பிராகிருத இலக்கியத்தையும் ஆதரித்து வந்தனர்.