விஜயநகரப் பேரரசு
தென்னிந்தியாவை ஆண்ட இராச்சியங்களில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
விசயநகரப் பேரரசு (பொ.ஊ. 1336–1646) தென்னிந்திய பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும்.[3][4] தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே[5][6] (வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி(ஆய்வுக்குரியது),) விசயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் அரிகரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருட்டிணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விசயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் கட்டுமானங்கள் இன்றைய இந்திய மாநிலமான கருநாடகத்தில் உள்ள அம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அம்பி விளங்குகிறது.[7]
விசயநகரப் பேரரசு | |
---|---|
1336–1646 | |
நிலை | பேரரசு |
தலைநகரம் | விசயநகரம் (அம்பி) (1336–1565)
பெனுகொண்டா (1565–1592) |
பேசப்படும் மொழிகள் | கன்னடம் தெலுங்கு சமசுகிருதம்[2] |
சமயம் | இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
முடியரசன் | |
• 1336–1356 | முதலாம் அரிகரர் |
• 1642–1646 | மூன்றாம் சிரீரங்கா |
வரலாறு | |
• தொடக்கம் | 1336 |
• தொடக்க காலப் பதிவுகள் | 1343 |
• முடிவு | 1646 |
நாணயம் | வரகம் |
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயசு (Domingo Paes), பெர்னாவோ நுனிசு (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விசயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.
இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் அம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விசயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.
இப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் கன்னடம், தெலுங்கு தமிழ் மொழி இலக்கியம், இந்துக் கோயில் கட்டிடக் கலை, இந்து சமயம், நீர் பாசன முறை, தொழில், வணிகம் சிறப்பு விளங்கியது.
இப்பேரரசு பொ.ஊ. 1646 வரையில் நீடித்ததாயினும், பொ.ஊ. 1565 ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களுடன் நடைபெற்ற தலைகோட்டை போருக்கு பின்னர் விசயநகரப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது.