இராதாட்டமி
இந்து சமயத் திருவிழா / From Wikipedia, the free encyclopedia
இராதாட்டமி (Radhashtami) என்பது இந்துக் கடவுள் கிருட்டிணனின் முக்கிய மனைவியான இராதையின் பிறந்த நாளைக் கொண்டாடும் திருவிழாவாகும்.[4][5] இது இராதையின் பிறப்பிடமான பர்சானா மற்றும் முழு விரஜபூமி பிராந்தியத்திலும் எட்டாவது நாளில் (பிரகாசமான அட்டமி) (சந்திர மாதத்தின் புரட்டாசி (ஆகஸ்ட்-செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது.[6][7][8] கிருஷ்ண ஜெயந்திக்கு பதினைந்து நாட்களுக்குப் பிறகு இராதாட்டமி வருகிறது.[9]
விரைவான உண்மைகள் இராதாட்டமி, பிற பெயர்(கள்) ...
இராதாட்டமி | |
---|---|
பிருந்தாவனத்தில் அமைந்துள்ள கிருஷ்ண பலராமர் கோயிலில் இராதாட்டமி கொண்டாடப்படுகிறது. | |
பிற பெயர்(கள்) | இராதா ஜெயந்தி |
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | மதம், கலாச்சாரம் |
கொண்டாட்டங்கள் | கோவில்களில் மதிய வேளையிகளில் சிருங்கார ஆரத்தி, மணிமகேச யாத்திரை[1] |
2023 இல் நாள் | 23 செப்டம்பர் (சனிக்கிழமை)[2] |
2024 இல் நாள் | 11 செப்டம்பர் (புதன்கிழமை)[3] |
நிகழ்வு | வருடம் ஒருமுறை |
மூடு
வைணவத்தில் இராதை, கிருட்டிணனின் நித்திய மனைவியாகக் கருதப்படுகிறார். மேலும் அவரது நிபந்தனையற்ற அன்பிற்காகவும், கிருட்டிணன் மீதான மாறாத பக்திக்காகவும் வணங்கப்படுகிறார். இத்திருவிழா, மக்களின் சமூக வாழ்க்கையை நிர்வகிக்கும் கலாச்சார-மத நம்பிக்கை அமைப்பின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.[10]