இராதை
இந்துக் கடவுள் கிருட்டிணனின் மனைவி / From Wikipedia, the free encyclopedia
இராதை (Radha) இராதிகா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்துக் கடவுள்களில் ஒருவரும் கிருட்டிணனின் பிரதான மனைவியும் ஆவார். இவர் அன்பு, மென்மை, இரக்கம் மற்றும் பக்தி ஆகியவற்றின் தெய்வமாகவும் கருதப்படுகிறார். இவர் கிருட்டிணனின் பெண் தோழியாகவும் ஆலோசகராகவும் இருக்கிறார். இவர் மூலப்பிரகிருதி எனவும் லட்சுமியின் அவதாரம் எனவும் இந்துக்கள் நம்புகின்றனர்.[11][12][13][14][15] இராதை கிருட்டிணனின் அனைத்து அவதாரங்களிலும் உடன் தோன்றுகிறார்.[16][17] ஒவ்வொரு ஆண்டும் இராதாட்டமி அன்று இராதையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.[18][19]
இராதா | |
---|---|
பஞ்சப் பிரகிருதி[1]-இல் ஒருவர் | |
புனேவிலுள்ள அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் கோவிலில் இராதை | |
அதிபதி | பிரகிருதி, ஆதி தெய்வம்,[2][3] தாய் தெய்வம்,[4] சக்தி,[5] அன்பு, இரக்கம் மற்றும் பக்தியின் தெய்வம்[6] மேலான் தெய்வம்[7][8] |
வேறு பெயர்கள் | மாதவி, கேசவி, சிறீஜி, சியாமா, கிசோரி |
தேவநாகரி | राधा |
சமசுகிருதம் | இராதா |
வகை | |
இடம் | கோலாகா, பிருந்தாவனம், பர்சானா, திருப்பரமபதம் |
மந்திரம் |
|
துணை | கிருட்டிணன் |
பெற்றோர்கள் |
|
நூல்கள் | பிரம்ம வைவர்த்த புராணம், தேவி பாகவத புராணம், நாரத புராணம், பத்ம புராணம், கந்த புராணம், சிவமகாபுராணம், கீத கோவிந்தம், கோபால தபனி உபநிடதம், கார்க சம்கிதா, பிரம்ம சம்கிதா, சைதன்ய சரிதம்ரிதா |
விழாக்கள் | இராதாட்டமி, ஹோலி, சரத் பூர்ணிமா, கார்த்திகை பூர்ணிமா, கோபாஷ்டமி, லத்மர் ஹோலி, ஜூலன் பூர்ணிமா |
அரசமரபு | யது குலம்-சந்திர குலம் |
இவருக்கு கிருட்டிணனுடனான உறவில், காதலி மனைவி என இரட்டை பிரதிநிதித்துவம் உள்ளது. துவைதாத்துவைதம் இராதையை கிருட்டிணனின் நித்திய மனைவியாக வணங்குகின்றன.[20][21][22][23] இதற்கு நேர்மாறாக, கௌடிய வைணவம் போன்ற மரபுகள் இவரை கிருட்டிணனின் காதலியாகவும் தெய்வீக மனைவியாகவும் மதிக்கின்றன.[24][22]
இராதா வல்லப சம்பிரதாயம் மற்றும் அரிதாசி சம்பிரதாயத்தில், இராதை மட்டுமே பிரம்மமாக வணங்கப்படுகிறார்.[25]மற்ற இடங்களில், நிம்பர்க சம்பிரதாயம், புஷ்டிமார்க்கம், மகாநாம சம்பிரதாயம், சுவாமிநாராயண் சம்பிரதாயம், வைணவ-சஹாஜியா, மணிப்பூரி வைணவம் மற்றும் சைதன்யருடன் தொடர்புடைய கௌடிய வைணவ இயக்கங்களில் கிருட்டிணனுடன் அவரது முக்கிய துணைவியாக இராதை வணங்கப்படுகிறார்.[26]
இராதை விரஜபூமியில் வாழ்ந்த கோபியர்களின் தலைவியாக விவரிக்கப்படுகிறார்.[22] மற்ற கோபியர்கள் அனைவரும் வழக்கமாக ராதாவின் பணிப் பெண்களாகக் கருதப்படுகின்றனர். இவர் பல இலக்கியப் படைப்புகளுக்கு ஊக்கமளித்துள்ளார். மேலும் கிருட்டிணனுடன் இவரது இராசலீலை நடனம் பல வகையான கலை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளித்துள்ளது.[27][28][29]
இந்து மதத்தின் வைணவ மரபுகளில் இராதை ஒரு முக்கியமான தெய்வம். இவருடைய குணாதிசயங்கள், வெளிப்பாடுகள், விளக்கங்கள் மற்றும் பாத்திரங்கள் பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடுகிறது. இராதை கிருட்டிணனுடன் உள்ளார்ந்தவர். ஆரம்பகால இந்திய இலக்கியங்களில், இவரைப் பற்றிய குறிப்புகள் பரவலாக காணப்படவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தின் சகாப்தத்தில், கிருட்டிணன் மீதான இவரது அசாதாரணமான காதல் வெளிப்பட்டதால், இராதை மிகவும் பிரபலமானார்.[30][31]
ஜெயதேவரின் 12ஆம் நூற்றாண்டு சமசுகிருத இலக்கியமான கீத கோவிந்தத்திலும்[32][33][34][35] நிம்பர்காச்சாரியரின் தத்துவப் படைப்புகளிலும்[36] இராதையின் முதல் முக்கிய தோற்றம் வெளிப்படுகிறது.
இராதா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள கோகுலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராவல் என்ற சிறிய ஊரில் பர்சானாவின் யது குல ஆட்சியாளரான விருசபானுவுக்கும் அவரது மனைவி கீர்த்திதாவுக்கும் பிறந்தார்.[37][38][39] ஆனால் இவர் பர்சானாவில் இவர் வளர்ந்ததாக கூறப்படுகிறது.[40] பிரபலமான புராணத்தின்படி, யமுனை ஆற்றில் மிதந்து வந்த தாமரையில் இராதாவை விருசபானு கண்டுபிடித்தார். இராதை கிருட்டிணனை விட ஒன்பது மாதங்கள் மூத்தவர்.[41]நாட்டுப்புறக் கதைகளின்படி, கிருட்டிணன் தன் முன் தோன்றும் வரை இராதா உலகத்தைப் பார்க்க கண்களைத் திறக்கவில்லை.[42]